.

Pages

Friday, October 16, 2015

பள்ளி மாணவிகள் மத்தியில் பேராசிரியரின் எழுச்சி உரை !

மறைந்த மாமேதை டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15ம் நாள் இளைஞர் எழுச்சி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையொட்டி பட்டுக்கோட்டை புனித இசபெல்லா மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை தலைமை அருட்சகோதரி சிறிய புஸ்பம் வகித்தார். பள்ளி தாளாளர் அருட்சகோதரி செபஸ்த்தியம்மாள் முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் கே. செய்யது அஹமது கபீர் மறைந்த மாமேதை டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் குறித்து எழுச்சியுரை நிகழ்த்தினார். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த உரை பள்ளி மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சிறப்பு விருந்தினராக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் சேர்மன் மரைக்கா கே. இத்ரீஸ் அஹமது கலந்துகொண்டு மாணவிகள் நடத்திய கலை நிகழ்ச்சிகளை வெகுவாக பாராட்டினார்.

முன்னதாக வரவேற்புரை பள்ளி ஆசிரியை விண்ணரசி நிகழ்த்தினார். விழா முடிவில் பள்ளி ஆசிரியை திருமதி மோகனம்பாள் நன்றி கூறினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் பள்ளி ஆசிரியை திருமதி லூசியா தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் நடத்திய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன. இதில் 2200 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 


1 comment:

  1. நாட்டை வலுவாக்க வேண்டும் என கலாம் கனவு கண்டார், அவரது கடைசி நிமிடம் வரை மாணவர்களுடன் கலந்து உரையாடி வந்தார் . அவரது புகழ் என்றும் நிலைத்து நிற்கும் . அவரது வாழக்கை நமக்கெல்லாம் ஒரு பாடமாக திகழும். இளையசமுதாயத்தினர், இளம் விஞ்ஞானிகள் கலாம் கொள்கையை பின்பற்றி வாழ வேண்டும் .நாட்டின் பெருமையை உலக அளவில் உயர்த்தி காட்டினார் . கலாம் போல் உறுதி ஏற்று நாம் எல்லோரும் வாழ வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.