அதன் பிறகு திருப்பூர் நிறுவனத்தில் வேலை, சொந்த ஊரில் நில புரோக்கர் என பணியாற்றினார். கடந்த 37 ஆண்டுகளாக வாரப்பத்திரிக்கைகளுக்கு கதை, கட்டுரை, நகைசுவை துணுக்குகள் எழுதி வருகிறார். இவருக்கு மனைவியும், மகனும், ஒரு சகோதரரும், சகோதரியும் உண்டு.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் அதிரை ஆட்டை கழுதையாக்கிய ஊரா ? என பரவலாக பேசப்படும் செய்திக்கு 19-10-2015 என்ற தேதியிட்ட இந்த வாரம் வெளிவந்துள்ள குமுதம் பத்திரிகையில் இவரது சுவாரசிய விளக்கம் வெளியாகி இருக்கிறது.
தனது அனுபவம் குறித்து 'ஜோக்ஸ் எழுத்தாளர்' அதிரை புஹாரி நம்மிடம் கூறுகையில்....
என்னுடைய முதல் ஜோக்ஸ் கடந்த 16-11-1977 அன்று குமுதத்தில் வெளியானது. இதற்கு சன்மானமாக ₹ 7.5 மணியாடர் அனுப்பினார்கள். துக்ளக் இதழில் 1000த்திற்கும் மேற்பட்ட எனது கேள்விகள் பிரசுமாகியுள்ளது. தொடர்ந்து தினத்தந்தி, குமுதம், விகடன், குங்குமம், ராணி, கல்கி, பாக்கியா, தினமணிக்கதிர் உள்ளிட்ட பத்திரிகைகளில் இதுவரை 1500 க்கும் மேற்பட்ட ஜோக்ஸ்கள் பிரசுரம் ஆகியுள்ளது. ஆல் இந்தியா ரேடியோவில் எனது பெயர் பலமுறை ஒலிப்பரப்பட்டுள்ளது. இலங்கை ஒலிப்பரப்பின் தென்னிந்தியா சேவையில் எனது விமர்சகர் விருப்பம் நிகழ்ச்சி 15 நிமிடம் ஒலிப்பரப்பாகியது.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பட்டுக்கோட்டையில் சன் டிவியின் சார்பாக நடந்த டிராஜேந்தரின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 'மெல்ல தமிழ் இனி சாகும் என்ற பாரதியின் கூற்று பொய்...' எனும் தலைப்பில் பேசினேன். இவை அனைவரையும் கவர்ந்தது.
இன்றைய பிரபல ஜோக்ஸ் எழுத்தாளர்களில் அனைவருடன் நல்ல நட்பு உண்டு. கடந்த 1980 ஆண்டு முதல் ஜோக்ஸ் எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு ஒருவருக்கொருவரின் திறமைகளை பாராட்டி மகிழ்வது உண்டு. இப்போது உள்ளவர்களிடம் அந்த அன்யோயம் இல்லை என்பதில் மட்டும் சின்ன வருத்தம் எப்போதும் உண்டு' என்றார்.
பதிவிற்கு நன்றி ..
ReplyDeleteஎன் காக்காவிடம் கொஞ்சம் கொஞ்சமா கேளுங்க நம்மவூரு குசும்புகளை சொல்லிக்கொண்டே இருப்பார்கள் .
ஆஹா...சுவாரஸ்யமான பதிவு..புஹாரி காக்காக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅவரிடம் பல குசும்புகளை ஒரு தொடராக இங்கே பதியலாமே.
ஆஹா...சுவாரஸ்யமான பதிவு..புஹாரி காக்காக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅவரிடம் பல குசும்புகளை ஒரு தொடராக இங்கே பதியலாமே.
அதிரை புகாரி சினிமா செய்திகளின் சுரங்கம் 1950களில் இருந்து இன்றைய சினிமா வரை அறிந்து இருக்க கூடிய அற்புதமான மனிதர் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅதிரை புகாரி சினிமா செய்திகளின் சுரங்கம் 1950களில் இருந்து இன்றைய சினிமா வரை அறிந்து இருக்க கூடிய அற்புதமான மனிதர் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅதிரை புஹாரி அவர்கள் துக்ளக் இதழில் ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட கேள்வியும் அதற்கு துக்ளக் சோ அளித்த பதிலும் எனது மனதில் இன்றும் நிழலாடுகிறது. செய்யது புஹாரி கேட்ட கேள்வி “ மழை ஏன் சோவென்று பெய்கிறது? அதற்கு சோவின் பதில் “ மழை சோவென்று பெய்யாமல் செய்யது புஹாரி என்றா பெய்யும்?
ReplyDeleteபுஹாரி காக்காவிடம் பேசிக் கொண்டிருந்தால் கவலை பறந்து விடும்
ReplyDelete