தூத்துக்குடியிலிருந்து ஈசிஆர் சாலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ட்ரக் வாகனத்தில் 28 குயூபிக் மீட்டர் கொள்ளளவு கொண்ட கண்டெய்னரில் டைல்ஸ் ஏற்றிக்கொண்டு காரைக்கால் நோக்கி சென்றது. வாகனத்தை தூத்துக்குடி மாவட்டம் மாவில்பட்டி கிராமத்தை சேர்ந்த பாலகுருசாமி மகன் ராஜ்குமார் ( வயது 28 ) ஓட்டிவந்தார். கண்டெய்னரில் டைல்ஸ் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை அதிரை ஈசிஆர் சாலை பேருந்து நிலையம் அருகே வந்தபோது சாலையின் வளைவில் நிலை தடுமாறி சாலையின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகன ஓட்டுனர் ராஜ்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தகவலறிந்த அதிராம்பட்டினம் காவல் நிலையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பேருந்து நிலைய பகுதியில் ஏற்பட்டுள்ள வாகன நெருக்கடியை ஒழுங்குப்படுத்தி வருகின்றனர். கவிழ்ந்த கண்டெய்னர் ட்ரக் வாகனத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை அதிரை ஈசிஆர் சாலை பேருந்து நிலையம் அருகே வந்தபோது சாலையின் வளைவில் நிலை தடுமாறி சாலையின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகன ஓட்டுனர் ராஜ்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தகவலறிந்த அதிராம்பட்டினம் காவல் நிலையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பேருந்து நிலைய பகுதியில் ஏற்பட்டுள்ள வாகன நெருக்கடியை ஒழுங்குப்படுத்தி வருகின்றனர். கவிழ்ந்த கண்டெய்னர் ட்ரக் வாகனத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.