.

Pages

Sunday, October 25, 2015

ஜாவியா நிறைவு நாள் நிகழ்ச்சிக்காக உணவு தயார் செய்வதில் தீவிரம் ! நேரடி ரிப்போர்ட்

அதிரை ஜாவியாவில் கடந்த 14-09-2015 அன்று முதல் நடைபெற்று வரும் புகாரி ஷரீப் மஜ்லிஸ் நாளை 26-10-2015 திங்கட்கிழமையோடு நிறைவு பெறுகிறது. இந்தநிலையில் நாளை நடைபெற உள்ள நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் உணவு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்ற வருகிறது. இதற்காக 7 ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிக்காக மேஸ்திரி முஹம்மது பாருக் தலைமையில் மொத்தம் 10 சமையல் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு பிரத்தியோகமாக தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடவசதிக்காக பெண்கள் அனைவரும் ஜாவியா அருகே உள்ள காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமர வைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

இதுகுறித்து சமையல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் மேஸ்திரி முஹம்மது பாருக் நம்மிடம் கூறியதாவது...
'நான்கு நபர்கள் போதுமான அளவில் உண்ணும் அளவில் மொத்தம் 7 ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக 1500 கிலோ அரிசி பயன்படுத்தப்பட இருக்கிறது. மொத்தம் 25 சட்டிகளில் உணவை தயாரிக்க உள்ளோம். இன்று மதியம் 3 மணி முதல் சமையல் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இரவு 10 மணிக்கு மேல் அடுப்பு பற்ற வைக்கும் பணி ஆரம்பமாகும். இந்த பணி தொடர்ந்து அதிகாலை 4 மணி வரை நீடிக்கும். உணவு தயாரானதுடன் பேக்கிங் செய்யும் பணிகள் தொடங்கும். இதற்காக ஜாவியா நிர்வாகத்தின் சார்பில் ஏராளமான தன்னார்வல இளைஞர்கள் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.