நாளை நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு பிரத்தியோகமாக தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடவசதிக்காக பெண்கள் அனைவரும் ஜாவியா அருகே உள்ள காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமர வைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
இதுகுறித்து சமையல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் மேஸ்திரி முஹம்மது பாருக் நம்மிடம் கூறியதாவது...
'நான்கு நபர்கள் போதுமான அளவில் உண்ணும் அளவில் மொத்தம் 7 ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக 1500 கிலோ அரிசி பயன்படுத்தப்பட இருக்கிறது. மொத்தம் 25 சட்டிகளில் உணவை தயாரிக்க உள்ளோம். இன்று மதியம் 3 மணி முதல் சமையல் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இரவு 10 மணிக்கு மேல் அடுப்பு பற்ற வைக்கும் பணி ஆரம்பமாகும். இந்த பணி தொடர்ந்து அதிகாலை 4 மணி வரை நீடிக்கும். உணவு தயாரானதுடன் பேக்கிங் செய்யும் பணிகள் தொடங்கும். இதற்காக ஜாவியா நிர்வாகத்தின் சார்பில் ஏராளமான தன்னார்வல இளைஞர்கள் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
Masha allah
ReplyDelete