மறைந்த மாமேதை டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15ம் நாள் இளைஞர் எழுச்சி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையொட்டி அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இளைஞர் எழுச்சி தின விழா பள்ளியின் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் மூத்த முதல்வர் பேராசிரியர் பர்கத் தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் ஆசிரியை திருமதி எஸ் ஆஃப்தாப் பேகம், இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மேலாளரும், முன்னாள் தலைமை ஆசிரியருமாகிய எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ஓ.கே.எம் சிபஹத்துல்லா, பெற்றோர் ஆசிரியர் கழக இணைச்செயலாளர் எம்.எஃப் முஹம்மது சலீம் துணை தலைவர் பேராசிரியை தஸ்லீமா, பொருளாளர் ஹாஜரம்மாள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் இயக்குனர், காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம். ஏ முஹம்மது அப்துல் காதர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
விழாவில் பள்ளி முதுகலை ஆசிரியை திருமதி கண்ணகி ஆசிரியர் உரையையும், பள்ளி மாணவர் முஹம்மது ஷஃப்வான் மாணவர் உரையையும் வழங்கினார்கள்.
முன்னதாக பள்ளியின் முதுகலை ஆசிரியர் திருமதி பி. கமலக்கண்ணி வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் தமிழாசிரியர் பி. பார்த்த சாரதி இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.
விழா முடிவில் பள்ளி ஆசிரியர் ஆர். விஜயராஜ் நன்றி கூறினார். இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஆய்வக பணியாளர்கள், மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
விழாவிற்கு பள்ளியின் மூத்த முதல்வர் பேராசிரியர் பர்கத் தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் ஆசிரியை திருமதி எஸ் ஆஃப்தாப் பேகம், இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மேலாளரும், முன்னாள் தலைமை ஆசிரியருமாகிய எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ஓ.கே.எம் சிபஹத்துல்லா, பெற்றோர் ஆசிரியர் கழக இணைச்செயலாளர் எம்.எஃப் முஹம்மது சலீம் துணை தலைவர் பேராசிரியை தஸ்லீமா, பொருளாளர் ஹாஜரம்மாள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் இயக்குனர், காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம். ஏ முஹம்மது அப்துல் காதர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
விழாவில் பள்ளி முதுகலை ஆசிரியை திருமதி கண்ணகி ஆசிரியர் உரையையும், பள்ளி மாணவர் முஹம்மது ஷஃப்வான் மாணவர் உரையையும் வழங்கினார்கள்.
முன்னதாக பள்ளியின் முதுகலை ஆசிரியர் திருமதி பி. கமலக்கண்ணி வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் தமிழாசிரியர் பி. பார்த்த சாரதி இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.
விழா முடிவில் பள்ளி ஆசிரியர் ஆர். விஜயராஜ் நன்றி கூறினார். இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஆய்வக பணியாளர்கள், மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.