.

Pages

Saturday, October 31, 2015

224 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கி விபத்து!

224 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் எகிப்தில் விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் இருந்த 217 பயணிகள் உட்பட 224 பேரின் நிலைமை என்னவானது என்பது இன்னும் தெரியவரவில்லை. இந்நிலையில், சினாயில் அதன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக எகிப்து அரசு தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான ஏர்பஸ் ஏ-321 (A-321) விமானம் கோகலிமாவியா ஏர்லைன்ஸுக்கு சொந்தமானது. அந்த விமானத்தின் பதிவு எண் கேஜிஎல்-9268 (KGL-9268).

ரஷ்ய விமானம் சினாயின் மலைப்பகுதிகளில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்று சந்தேகப்பட்டு வரும் நிலையில் அதன் பாகங்களை ராணுவ விமானங்கள் கண்டு பிடித்துள்ளதாக எகிப்து அரசு தெரிவித்துள்ளது.

224 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் எகிப்தில் விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் இருந்த 217 பயணிகள் உட்பட 224 பேரின் நிலைமை என்னவானது என்பது தெரியவராத நிலையில் விபத்துப் பகுதிக்கு 45 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் மீட்பு பணி நடைபெறும் என்று எகிப்து அரசு கூறியுள்ளது.

விமானம் எகிப்தின் மத்திய சினாய் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதை அந்நாட்டு பிரதமர் ஷரீப் இஸ்மாயில் அலுவலகம் உறுதி செய்துள்ளது.

பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பில், "ரஷ்ய பயணிகள் விமானம் எகிப்தின் மத்திய சினாய் பகுதியில் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்து விமான போக்குவரத்துத் துறை மூத்த அதிகாரி கூறும்போது, "விபத்துக்குள்ளான ரஷ்ய விமானத்தில் 217 பயணிகள், 7 விமான சிப்பந்திகள் என மொத்தம் 224 பேர் இருந்துள்ளனர். விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்தவர்கள் நிலை என்னவென்று தெரியவில்லை" என்றார்.

எகிப்தில் ஷாம் அல் ஷேக் நகரில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குச் செல்லும்போது விபத்து நடந்துள்ளது.

இதற்கிடையில் தங்கள் நாட்டு விமானம் எகிப்தில் ஷாம் அல் ஷேக் நகரில் இருந்து புறப்பட்ட அடுத்த 25-வது நிமிடத்திலிருந்து கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து விலகியதாக ரஷ்ய விமான போக்குவரத்து துறையும் உறுதிப்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.