தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பொது சேவை மையத்தில் பொது மக்களிடமிருந்து பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பெறப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் 27.10.2015 இன்று செய்தியாளர்கள் சுற்றுப்பயணத்தில் செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்
ஆய்விற்கு பிறகு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் பொது இ-சேவை மையங்களில் அமைத்து நிர்வகித்து வருகிறது. இம்மையங்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் இதர அரசு விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில் காலை 9.45 முதல் மாலை 05.45 வரை செயல்பட்டு வருகிறது. வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் வருமானச் சான்று, சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, முதல் பட்டதாரிச் சான்று, கணவரால் கைவிடப்பட்டோருக்கான சான்று, சிட்டா நகல், அ பதிவேடு நகல் மற்றும் சமூக நலத்துறையின் மூலம் வழங்கப்படும் திருமணஉதவித் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்தல், பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் வழங்கப்படுகிறது. இது வரை இ-சேவை மையங்கள் மூலமாக 61,382 சான்றுகளும், 23,358 பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன.
தற்பொழுது இந்த பொது இ-சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் சேவை 21.09.2015 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணமாக ரூ.1655 மட்டும் செலுத்தி ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விரும்வோரும், தட்கல் (உடனடி) முறையில் பாஸ்போர்ட் பெற விரும்புவோரும் உரிய ஆவணங்களுடன் பொது இ-சேவை மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்.
இதுவரை 5 பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. பொது மக்கள் அலைந்து சிராமப்படாமல் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் இயங்கி வரும் பொது இ-சேவை மையங்கள் மூலமாக மேற்காணும் அனைத்து சேவைகளையும் பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சித் தலைவருடன் அரசு கேபிள் டிவி வட்டாட்சியர் திருமதி.மாலதி, ஒரத்தநாடு வட்டாட்சியர் திருமதி. தமிழ் ஜெயந்தி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
ஆய்விற்கு பிறகு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் பொது இ-சேவை மையங்களில் அமைத்து நிர்வகித்து வருகிறது. இம்மையங்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் இதர அரசு விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில் காலை 9.45 முதல் மாலை 05.45 வரை செயல்பட்டு வருகிறது. வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் வருமானச் சான்று, சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, முதல் பட்டதாரிச் சான்று, கணவரால் கைவிடப்பட்டோருக்கான சான்று, சிட்டா நகல், அ பதிவேடு நகல் மற்றும் சமூக நலத்துறையின் மூலம் வழங்கப்படும் திருமணஉதவித் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்தல், பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் வழங்கப்படுகிறது. இது வரை இ-சேவை மையங்கள் மூலமாக 61,382 சான்றுகளும், 23,358 பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன.
தற்பொழுது இந்த பொது இ-சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் சேவை 21.09.2015 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணமாக ரூ.1655 மட்டும் செலுத்தி ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விரும்வோரும், தட்கல் (உடனடி) முறையில் பாஸ்போர்ட் பெற விரும்புவோரும் உரிய ஆவணங்களுடன் பொது இ-சேவை மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்.
இதுவரை 5 பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. பொது மக்கள் அலைந்து சிராமப்படாமல் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் இயங்கி வரும் பொது இ-சேவை மையங்கள் மூலமாக மேற்காணும் அனைத்து சேவைகளையும் பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சித் தலைவருடன் அரசு கேபிள் டிவி வட்டாட்சியர் திருமதி.மாலதி, ஒரத்தநாடு வட்டாட்சியர் திருமதி. தமிழ் ஜெயந்தி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.