.

Pages

Saturday, October 31, 2015

அதிரை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் !

ஹரியான மாநிலத்தில் தலித் குடும்பத்தைச் சேர்ந்த பச்சிளம் குழந்தைகள் தீ வைத்து கொளுத்திய குற்றவாளிகளை கண்டித்து இஸ்லாமிய ஜனநாயக முன்னணி கட்சியின் சார்பில் அதிரை பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்பாட்டம் நடந்தது.

கண்டன ஆர்பாட்டத்திற்கு இஸ்லாமிய ஜனநாயக முன்னணி கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் அதிரை ஜெஹபர் சாதிக் தலைமை வகித்தார். இஸ்லாமிய ஜனநாயக முன்னணி கட்சியின் அதிரை நகர செயலாளர் முஹம்மது மொய்தீன், நகர தலைவர் அன்சாரி, அப்துல் ஜப்பார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட இஸ்லாமிய ஜனநாயக முன்னணி கட்சியின் மாநில ஒருங்கினைப்பாளர் மதுக்கூர் மைதின் கண்டன உரை நிகழ்த்தினார்.

மேலும் இஸ்லாமிய ஜனநாயக முன்னணி கட்சியின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரியாஸ், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் ஜியாவுதீன், விடுதலை சிறுத்தை கட்சியின் அதிரை நகர செயலாளர் புருசோத்தமன் என்கிற புதியவன், ஆதி திராவிட முன்னேற்ற கழக நிறுவன தலைவர் சதாசிவ குமார் ஆகியோர் தங்களது கண்டனங்களை பதிவு செய்தார்கள்.

முன்னதாக இஸ்லாமிய ஜனநாயக முன்னணி கட்சியின் அதிரை நகர செயலாளர் முஹம்மது மொய்தீன் வரவேற்புரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்ட முடிவில் இஸ்லாமிய ஜனநாயக முன்னணி கட்சி இளைஞர் அணி நகர தலைவர் முஹம்மது செல்ல ராஜா நன்றி கூறினார்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இஸ்லாமிய ஜனநாயக முன்னணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.