.

Pages

Monday, October 26, 2015

ஜாவியா நிறைவு நாள் நிகழ்ச்சியில் திரண்ட பொதுமக்கள் ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை ஜாவியாவில் பல ஆண்டுகளைக் கடந்து சிறப்பாக நடத்தப்பட்டு வரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் கடந்த 14-09-2015 அன்று முதல் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வந்தன. தினமும் காலை நேரங்களில் புஹாரி ஷரீஃப் வாசிக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மார்க்க அறிஞர்களின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்ற வந்தது. அதிகாலையில் ஆரம்பமாகி சரியாக காலை 8.20 மணி வரை நடைபெற்று வந்தது. இதில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், அவ்வபோது வருகை தரும் வெளிமாநிலத்தவர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். தினந்தோறும் நடைபெறும் நிகழ்ச்சி முடிவில் துஆ கேட்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டு வந்தன. இதில் சராசரியாக 1000 த்திலிருந்து 1800 பேர் வரை கலந்துகொண்டு சிறப்பித்து வந்தனர். குறிப்பாக விடுமுறை தினங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற்று வந்த மஜ்லீஸ் நிகழ்ச்சி இன்று திங்கட்கிழமையுடன் நிறைவுபெற்றது. இன்றைய இறுதி நாள் நிகழ்ச்சியில் ரஹ்மானியா அரபிக் கல்லூரியின் முதல்வர் மவ்லவி முஹம்மது குட்டி அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிறப்பு துஆ ஓதப்பட்டன.

கூட்டம் கடுமையாக காணப்பட்டதால் இட நெருக்கடி ஏற்பட்டது. இட பற்றாகுறையால் ஜாவியா வரண்டாவில் அமரவைக்கப்பட்டனர். சிலர் நின்றுகொண்டு சொற்பொழிவை கேட்டனர். பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் ஜாவியா நிர்வாககத்தின் சார்பில் தனித்தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொலை தூரத்திலிருந்து வருகை வந்த பெரும்பாலானோர் தங்களின் வாகனத்தை ஜாவியா சாலையின் இருபுறமும் நிறுத்தி இருந்ததால் மஜ்லீஸ் முடியும் வரை அப்பகுதி முழுதும் வாகன நெருக்கடியாக காணப்பட்டது.

நிர்வாக கமிட்டி சார்வாக 7 ஆயிரம் உணவு பொட்டலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. கடந்த வருடங்களை போல் இந்த வருடமும்  உணவு பொட்டலங்களில் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் பைகளை தவிர்த்துக்கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜாவியா நிர்வாக கமிட்டியினர் சிறப்பாக செய்து இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.