பொது சிவில் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை திணிக்கும் முயற்சியை எதிர்த்தும், முஸ்லிம்களுக்கும் மற்ற மத சிறுபான்மையினருக்கும் எதிராக நிரந்தர அச்சுறுத்தலாக விளங்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அத்தியாயம் 44–ஐ ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் பல்வேறு பகுதியில் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அதிரை பேரூர் சார்பில் இன்று ஜூம்மா தொழுகைக்கு பிறகு கையெழுத்து பெரும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான அதிரையர்கள் தங்களது கையெழுத்தை வழங்கி ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில நிர்வாகி அதிரை எஸ்.எஸ்.பி நசுருதீன், மூத்த உறுப்பினர் கே.எஸ்.ஏ அப்துல் ரஹ்மான், மாவட்ட நிர்வாகி வழக்கறிஞர் அப்துல் முனாப், ஜமால் முஹம்மது, அதிரை நகர தலைவர் கே.கே ஹாஜா நஜுமுதீன், பொருளாளர் சேக் அப்துல்லா, 'மணிச்சுடர்' நிருபர் சாகுல் ஹமீது, அபூ பக்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து 'மணிச்சுடர்' நிருபர் சாகுல் ஹமீது நம்மிடம் கூறுகையில்,
இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் சார்பில் மத்தியஅரசு கொண்டு வரவுள்ள பொது சிவில் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கப்பட்டு வருகிறது.
இன்று அதிரையின் அனைத்து ஜும்மா பள்ளிகளிலும் கையெழுத்து பெரும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். இதில் அதிரை பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களின் கையெழுத்தை வழங்கி வருகின்றனர். எங்களது கோரிக்கைக்கு பிறமத நண்பர்களும் ஆதரவு அளித்துள்ளனர். மேலும் கையெழுத்து பெரும் பணியை அதிரை சுற்றுவட்டார பகுதி கிராமங்களிலும் தொடர்ந்து நடத்த இருக்கிறோம். இவற்றை இறுதியில் மாநில நிர்வாகிகளிடம் ஒப்படைப்போம். அவர்கள் ஜனாதிபதியை சந்தித்து வழங்குவார்கள்' என்றார்.
இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை திணிக்கும் முயற்சியை எதிர்த்தும், முஸ்லிம்களுக்கும் மற்ற மத சிறுபான்மையினருக்கும் எதிராக நிரந்தர அச்சுறுத்தலாக விளங்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அத்தியாயம் 44–ஐ ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் பல்வேறு பகுதியில் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அதிரை பேரூர் சார்பில் இன்று ஜூம்மா தொழுகைக்கு பிறகு கையெழுத்து பெரும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான அதிரையர்கள் தங்களது கையெழுத்தை வழங்கி ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில நிர்வாகி அதிரை எஸ்.எஸ்.பி நசுருதீன், மூத்த உறுப்பினர் கே.எஸ்.ஏ அப்துல் ரஹ்மான், மாவட்ட நிர்வாகி வழக்கறிஞர் அப்துல் முனாப், ஜமால் முஹம்மது, அதிரை நகர தலைவர் கே.கே ஹாஜா நஜுமுதீன், பொருளாளர் சேக் அப்துல்லா, 'மணிச்சுடர்' நிருபர் சாகுல் ஹமீது, அபூ பக்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து 'மணிச்சுடர்' நிருபர் சாகுல் ஹமீது நம்மிடம் கூறுகையில்,
இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் சார்பில் மத்தியஅரசு கொண்டு வரவுள்ள பொது சிவில் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கப்பட்டு வருகிறது.
இன்று அதிரையின் அனைத்து ஜும்மா பள்ளிகளிலும் கையெழுத்து பெரும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். இதில் அதிரை பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களின் கையெழுத்தை வழங்கி வருகின்றனர். எங்களது கோரிக்கைக்கு பிறமத நண்பர்களும் ஆதரவு அளித்துள்ளனர். மேலும் கையெழுத்து பெரும் பணியை அதிரை சுற்றுவட்டார பகுதி கிராமங்களிலும் தொடர்ந்து நடத்த இருக்கிறோம். இவற்றை இறுதியில் மாநில நிர்வாகிகளிடம் ஒப்படைப்போம். அவர்கள் ஜனாதிபதியை சந்தித்து வழங்குவார்கள்' என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.