.

Pages

Friday, October 30, 2015

அதிரையில் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருட்டு !

அதிரை சின்ன நெசவுத்தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது இவரது மகன் அப்துல்லா ( வயது 30 ). கடந்த 3 வருடங்களாக அதிரை பேருந்து நிலையம் ஈசிஆர் சாலை பகுதியில் செல்போன் கடை வைத்து மொத்தமாகவும், சில்லறையாகவும் வியாபாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை கடையை திறக்க வந்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் முன்பகுதி கண்ணாடி சிதறிக்கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர் கடையின் உள்ளே சென்று பார்த்தார். அப்பொழுது கடையில் 4 செல்போன்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக அப்துல்லா அதிரை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதிரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருட்டு போன செல்போன்களின் மதிப்பு ரூ 20,000/- என கூறப்படுகிறது. இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.