.

Pages

Thursday, October 29, 2015

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் விழிப்புணர்வு பேரணி!

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் விழிப்புணர்வு பேரணி
மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்ர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:
அரசு அலுவலர்கள், பணியாளர்கள் நேர்மையாக பணியாற்ற வேண்டும். மனசாட்சிப்படி பணிபுரிய வேண்டும். ஏழைய எளிய மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய திட்டங்களை அரசு விதிகளை பின்பற்றி விரைவாக செயல்படுத்த வேண்டும்.  எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை மனப்பான்மையுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொது மக்களும் பொறுமையாக இருந்து எந்த ஒரு பணியாக இருந்தாலும் வரிசைப்படி பின்பற்ற வேண்டும்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் பேசினார்.

விழிப்புணர்வு பேரணியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ரெத்தினவேல்,  மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சிங்காரவேலு, மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆய்வுக்குழு அலுவலர் திரு.எம்.கே.பாஸ்கர், துணை ஆய்வு அலுவலர் திரு.குருமூர்த்தி, வீரராகவ பள்ளி தலைமையாசிரியர் திரு.சாமிக்கண்ணு, 400 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.