இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 1600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆங்கில வழிக்கல்வி மற்றும் இஸ்லாமிய மார்க்க சிறப்பு கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளியை அடுத்தகட்ட வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் பள்ளி நிர்வாகிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பள்ளி வளாகத்தில் நவீன முறையில் புதிதாக வகுப்பறைகள் கட்டி எழுப்புவது ஆகும். இதன் கட்டுமான பணி சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது. வகுப்பறை கட்டிடத்தின் அனைத்து பணிகளும் நிறைவுற்ற நிலையில் இதன் திறப்பு விழா நிகழ்ச்சி கடந்த [ 15-10-2015 ] அன்று மிக எளிமையாக நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மவ்லவி முஃப்தி அப்துல் ஹாதி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனையுடன் புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்கள், அலுவலக ஆய்வக பணியாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
நமது ஊரில் இங்கி வரும் இமாம் ஷாஃபி பள்ளிக் கூடம் இன்னும் மென் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாகவும் ஆமீன்.
ReplyDeleteஇந்த புதிய பள்ளி கட்டிடத்தை கொண்டும் எல்லாம் வல்ல இறைவனுடைய ரஹ்மத்தும், பரக்கத்தும் நிலவட்டுமாக.
நமது ஊரில் இங்கி வரும் இமாம் ஷாஃபி பள்ளிக் கூடம் இன்னும் மென் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாகவும் ஆமீன்.
ReplyDeleteஇந்த புதிய பள்ளி கட்டிடத்தை கொண்டும் எல்லாம் வல்ல இறைவனுடைய ரஹ்மத்தும், பரக்கத்தும் நிலவட்டுமாக.