.

Pages

Monday, October 19, 2015

இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு !

அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறை திறக்கப்பட்டது.

இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 1600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆங்கில வழிக்கல்வி மற்றும் இஸ்லாமிய மார்க்க சிறப்பு கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளியை அடுத்தகட்ட வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் பள்ளி நிர்வாகிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பள்ளி வளாகத்தில் நவீன முறையில் புதிதாக வகுப்பறைகள் கட்டி எழுப்புவது ஆகும். இதன் கட்டுமான பணி சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது. வகுப்பறை கட்டிடத்தின் அனைத்து பணிகளும் நிறைவுற்ற நிலையில் இதன் திறப்பு விழா நிகழ்ச்சி கடந்த [ 15-10-2015 ] அன்று மிக எளிமையாக நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மவ்லவி முஃப்தி அப்துல் ஹாதி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனையுடன் புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்கள், அலுவலக ஆய்வக பணியாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 
 
 

2 comments:

  1. நமது ஊரில் இங்கி வரும் இமாம் ஷாஃபி பள்ளிக் கூடம் இன்னும் மென் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாகவும் ஆமீன்.

    இந்த புதிய பள்ளி கட்டிடத்தை கொண்டும் எல்லாம் வல்ல இறைவனுடைய ரஹ்மத்தும், பரக்கத்தும் நிலவட்டுமாக.

    ReplyDelete
  2. நமது ஊரில் இங்கி வரும் இமாம் ஷாஃபி பள்ளிக் கூடம் இன்னும் மென் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாகவும் ஆமீன்.

    இந்த புதிய பள்ளி கட்டிடத்தை கொண்டும் எல்லாம் வல்ல இறைவனுடைய ரஹ்மத்தும், பரக்கத்தும் நிலவட்டுமாக.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.