.

Pages

Tuesday, October 20, 2015

மதுக்கூர் தமுமுக-மமக ஆலோசனைக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் !

தஞ்சாவூர் (தெற்கு) மாவட்டம் மதுக்கூர் பேரூர் கழக தமுமுக மற்றும் மமக ஆலோசனை கூட்டம் பேரூர் கழக அலுவலகத்தில் ஏ. ஜிபிரில் தலைமையிலும், மமக நகர செயலாளர் இஎஸ்எம்.முகம்மது ராசிக், தமுமுக பேரூர் கழக செயலாளர் ஏ. ஃபவாஸ், பொருளாளர் பொறியாளர் ஏ.இலியாஸ் அமீரக பொறுப்பாளர் இஎஸ்எம். பைசல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. கடந்த 5 வருடங்களுக்கு மேலாக அனைத்து சமுதாய மக்களுக்கும் சிறப்பான சேவையினை செய்துவரும் அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) பழுதாகி வரும் நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டின் நன்மையினை கருதி புதிய ஆம்புலன்ஸ் வாங்குவது.

2. பழைய ஆம்புலன்ஸை ஜனாஸா வாகனமாக பயன்படுத்தலாம் என்ற ஆலோசனை செய்யப்பட்டது.

3. வருகின்ற 22/10/2015 அன்று மதுக்கூருக்கு வருகைதரும் சமுதாயத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களையும்,மாநில அமைப்புச்செயலாளர்கள் அஸ்லம் பாஷா, தஞ்சை பாதுஷா ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்து நகரின் முக்கிய பகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சியின் கொடியினை ஏற்றுவது, நகர அலுவலகம் திறப்பது.

4. நகரில் அடிக்கடி குறிப்பாக இரவு நேரங்களில் சிலபகுதிகளில் ஏற்படும் மின்வெட்டுக்கு நிரந்தர தீர்வுகோரி மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு கொடுப்பது.

5. மதுக்கூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள மக்களிடம் குறிப்பாக இஸ்லாமிய மக்களிடம் விழிப்புணர்வு செய்தல்.

6. அதிரையில் நடைபெறும் பெருத்திரள் பொதுக்கூட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டுக்குர்பானி மற்றும் குர்பானி பிராணிகளின் தோல் குறித்த வரவு செலவு அதன் பொறுப்பாளர் தாஜுதீன் வாசித்தார். இந்த கூட்டத்தில் நகர தமுமுக- மமக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.

நன்றி: மதுக்கூர் தமுமுக

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.