.

Pages

Saturday, October 17, 2015

அதிரையில் நாம் மனிதர் கட்சியின் அறிமுக பொதுக்கூட்டம் !

அதிரையில் நாம் மனிதர் கட்சியின் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி சரபுதீன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக மக்கள் விடுதலை இயக்கத் தலைவர் தங்க. குமரவேல், நாம் மனிதர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிலால் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இதையடுத்து பேச வந்த நாம் மனிதர் கட்சியின் மாநில தலைவர் தவ்பீக் கட்சி குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார். இதில் ஓரிறை கொள்கை குறித்து குர்ஆன் வசனங்கள் ஒவ்வொன்றையும் தமிழ் விளக்கத்தோடு இனிய குரலில் பேசியது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

முன்னதாக நாம் மனிதர் கட்சியின் அதிரை நகர தலைவர் முபீஸ் வரவேற்புரை ஆற்றினார். கூட்ட முடிவில் மதுக்கூர் சாகுல் ஹமீது நன்றி கூறினார். அறிமுக பொதுக்கூட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
 
 
 
 
 
 

4 comments:

  1. சட்டசபை தேர்தல் வர இன்னும் 7 மாதம் இருக்கு அதற்குள் எத்தனை அறிமுகம் கூட்டம் அதிரையில் நடக்கபோவுதோ தெரியல ; ஆலிம்கள் நிறைந்த அதிராம்பட்டினம் என்று பெயர் போய் அரசியாவதிகள் அதிகமுள்ள ஊர் " அதிரை " என்று வந்துவிட்டது. ஊரின் பொதுப் பிரச்சனைக்கு மக்களை ஓன்று திரட்டுவது கஷ்டம் ஆனால் அரசியல் கூட்டத்திற்கு .... யாரப்பில் ஆலமீன்.

    ReplyDelete
  2. அல்லாஹ் நமது ஊரை பாதுகாப்பானதாக,ஊரிலுள்ள ஆலிம்கள் , பெரியவர்கள் இவர்களையெல்லாம் மதிக்காமல் சந்து கு ஒரு கட்சி வீட்டுக்கு ஒரு கட்சி, ஒவ்வரு வேஷ்டிகு ஒவ்வொரு கறை என்று இஸ்லாமிய சகோதரர்களை பரிவினைப்படுத்தும் முயற்சி , பல்வேறு ஊருக்கு முன்மாதிரியாக இருந்த ஊர் இப்ப, !

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.