.

Pages

Monday, October 26, 2015

தமிழக சட்டசபை செயலாளர் - சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியரோடு MMS குடும்பத்தினர் திடீர் சந்திப்பு !

தமிழக சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் மற்றும் சமீபத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக புதிதாக நியமிக்கப்பட்ட டி.கே.ராஜேந்திரன் ஆகியோரை MMS குடும்பத்தினர் திடீரென சந்தித்து பேசினார்கள்.

இந்த சந்திப்பின் போது MMS தாஜுதீன், MMS சேக்நசுருதீன், MMS ரபி அஹமது, MMS பஷீர் அஹமது, MMS அப்துல் கரீம், MMS நிஜார் அஹமது, MMS ரவூப், MMS சகாபுதீன், MMS செய்யது முஹம்மது புஹாரி, MMS சம்சுதீன், MMS பனாஷர்கான், MMS ரியாஸ் அஹமது, MMS புரோஸ்கான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சந்திப்பு குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் MMS பஷீர் அஹமது நம்மிடம் கூறியதாவது:
'இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. அரசு அலுவலகர்களோடும் - அரசியல் பிரமுகர்களோடும் நல்ல நட்புறவு பேணும் பழக்கத்தை மரியாதைக்குரிய காலஞ்சென்ற எங்கள் சாச்சா MMS அபுல் ஹசன் மரைக்காயர், காலஞ்சென்ற எங்கள் சாச்சா MMS அப்துல் வஹாப் ஆகியோர் எங்களுக்கு கற்றுத்தந்தது. இந்த பழக்கத்தை இன்றளவும் எங்கள் குடும்பத்தினர் பேணி வருகின்றனர்.

தமிழக சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் அவர்கள் மரியாதைக்குரிய காலஞ்சென்ற எங்கள் சாச்சா MMS அபுல் ஹசன் மரைக்காயர், காலஞ்சென்ற எங்கள் சாச்சா MMS அப்துல் வஹாப் ஆகியோர் மீது மிகுந்த பாசம் கொண்டவர். சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக புதிதாக நியமிக்கப்பட்ட டி.கே.ராஜேந்திரன் அவர்கள் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியவர். அப்போதிலிருந்து எங்கள் குடும்பத்திற்கு மிகவும் பரிச்சையமானவர். சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக புதிதாக பொறுப்பு ஏற்றதற்கு நேரிடையாக சந்தித்து நாங்கள் வாழ்த்து கூறினோம். இவர்கள் இருவரையும் நாங்கள் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்' என்றார்.
 
 
 
 

10 comments:

  1. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    ReplyDelete
  2. குடிநீர் இணைப்பை பாதுகாக்க வேண்டியா

    ReplyDelete
  3. அதிரை நல்லா தானே இருக்கு

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அழைக்கும்
    சகோதரர் மஸ்தான்கனி கருத்து நீக்க பட்டுஉள்ளது போல் தெரிகிறதே

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அழைக்கும்
    சகோதரர் மஸ்தான்கனி கருத்து நீக்க பட்டுஉள்ளது போல் தெரிகிறதே

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.