.

Pages

Sunday, October 25, 2015

வாகன விபத்தில் கல்லூரி மாணவன் பரிதாப பலி !

பேராவூரணி, குருவிக்கரம்பை அருகே உள்ள சென்னங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஆதிலிங்கம். இவரது மகன் நவீன் ( வயது 18 ) அதிராம்பட்டினம் கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவின் முதலாமாண்டு மாணவர்.

இந்த நிலையில் பேராவூரணியிலிருந்து பட்டுக்கோட்டை சாலையில் ஊருக்கு சென்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் நவீன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நவீனை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கல்லூரி மாணவர்களிடேயே பெரும் சோகத்தை எழுப்பியுள்ளது.

கல்லூரி மாணவன் நவீனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வோம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.