.

Pages

Wednesday, September 2, 2015

களிமண் விநாயகர் சிலைகளையே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ரசாயன கலவை இல்லாத சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத களிமண் விநாயகர் சிலைகளையே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் முனைவர் சுப்பையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் என். சுப்பையன் வெளியிட்ட அறிக்கை:
விநாயகர் சதுர்த்தி விழாவின்போது ரசாயனக் கலவையில் வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, நீர்நிலைகளும் மாசடைகின்றன. எனவே, விநாயகர் சிலைகளை கரைப்பது தொடர்பாக மத்திய அரசு வழிமுறைகளை அறிவித்துள்ளது.

சிலைகள் இயற்கை பொருட்களைக் கொண்டே செய்யப்பட வேண்டும் என்பதால், மக்கள் களிமண்ணால் செய்யப்பட்ட, ரசாயனக் கலவைப் பூச்சு இல்லாத விநாயகர் சிலைகளையே வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசும்போது தண்ணீரில் எளிதில் கரையும், எவ்வித தீங்கும் விளைவிக்காத வண்ணக்கலவைகளையே பயன்படுத்த வேண்டும்.

தீங்கு விளைவிக்கும் மற்றும் தண்ணீரில் கரையாத வர்ணங்கள் பூசுவதை அடியோடு தவிர்க்க வேண்டும்.

சிலைகள் மீது சாத்தப்படும் மலர்கள், அங்கவஸ்திரம் உள்ளிட்ட வழிபாட்டுப் பொருட்களை, அவற்றை நீர்நிலைகளில் கரைக்கும் முன் அப்புறப்படுத்த வேண்டும்.

சிலை கரைக்கும் இடங்களில் திடக்கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும் ஒவ்வொரு குழுவினரும், ரசாயனக்கலவை மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்ற பொருட்களின் தீமைகள் குறித்து கையேடு அச்சிட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த விநியோகம் செய்ய வேண்டும். ரசாயனம் வர்ணம் பூசப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதைத் தவிர்க்க வேண்டும். கடலோரத்தில், ஏரிகளில் சிலைகளை கரைக்கக்கூடாது. கடலில் 0.5 கிலோமீட்டர் தூரம் சென்று சிலைகளை கரைக்க வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர் விநாயகர் சிலைகளை வடவாறு, கல்லணைக்கால்வாய் ஆகிய இடங்களில் கரைக்க வேண்டும். அதேபோல் திருவையாறு-காவிரி ஆறு, பாபநாசம்-காவிரி ஆறு, சுவாமிமலை-காவிரி ஆறு, கும்பகோணம்-காவிரி ஆறு, திருபுவனம்-வீரசோழன் ஆறு, திருவிடைமருதூர்-வீரசோழன் ஆறு, ஆடுதுறை-வீரசோழன் ஆறு, பட்டுக்கோட்டை வட்டாரம், பேராவூரணி மற்றும கடலோரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கடலிலும் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட இடங்களில் போலீஸாரின் முன் அனுமதி பெற்று விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.