இந்நிலையில் நெசவுத்தெரு ஜமாத்தார்கள் கடந்த [ 07-08-2015 ] அன்று மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத்தில் ஒன்றுகூடி இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர். கூட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் மஹல்லாவாசிகளின் பங்களிப்போடு மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத்தின் மேற்கு பகுதியில் ( நோன்பு கஞ்சி காய்ச்சும் இடத்தில் ) புதிதாக பள்ளிவாசல் கட்டி எழுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் நெசவுத்தெரு மஹல்லாவாசிகளின் ஆலோசனைக்கூட்டம் மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத்தின் தலைவர் முஹம்மது மொய்தீன் தலைமை வகித்தார். சங்கத்தின் துணை தலைவர் என். முஹம்மது ஜபருல்லா, செயலாளர்கள் நூர் முஹம்மது, என் அபூ தாஹிர், பொருளாளர் அப்துல் ரஹ்மான் மற்றும் வெளிநாடுவாழ் மஹல்லா நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அமீரகத்திலிருந்து தாயகம் வந்துள்ள அதிரை என். அப்துல் ஹாதி கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் கூட்டத்தில் கலந்துகொண்ட மஹல்லாவாசிகளின் ஆலோசனைகள் பெறப்பட்டன. கூட்ட முடிவில் புதிதாக கட்டப்பட இருக்கும் பள்ளிவாசலுக்கு 'மஸ்ஜீது-ல்-ஹுதா' என்ற பெயர் சூட்டுவது முடிவு செய்யப்பட்டது.
மேலும் பள்ளி கட்டுமான கமிட்டியினர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் அமீராக முஹம்மது முகைதீன், ஜெஹபர் அலி ஆகியோரும், பொருளாராக நைனார் முஹம்மது, முஹம்மது சேக்தாவூது, சேக் நசுருதீன் ஆகியோரும், கட்டுமான குழுவினர்களாக ஹலிமுதீன், அபூதாகிர், தமீம் அன்சாரி, சேக் அலாவுதீன் ஆகியோரும், மார்க்க ஆலோசகர்களாக மவ்லவி இத்ரீஸ், மவ்லவி அப்துல் காதர் ஆகியோருடன் 14 பேர்கள் கொண்ட செயற்குழு கமிட்டியினரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.
இன்ஷா அல்லாஹ்
ReplyDeleteமுகல்லா வாசிகள் தவிர ஊர் பிரமுகர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கி இந்த காரியம் வெற்றியடைய துஆ செய்யவும்
இன்ஷா அல்லா
ReplyDeleteinsha allah
ReplyDeleteAameen
ReplyDelete