விலைவாசியைக் கட்டுப்படுத்துவது, பகுதிநேர ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15 ஆயிரம் நிர்ணயிப்பது, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது, அரசு வங்கிகள் தனியார் மயமாக்கம் மற்றும் அரசுத் துறை பங்குகளை விற்பதைக் கைவிடுவது என்பது உட்பட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 12 மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து நாடுதழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அதிரை பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரை பேரூர் செயலாளர் என். காளிதாஸ் தலைமை வகித்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர்கள் கே. சோமசுந்திரம், வி ராமலிங்கம், எஸ்.பன்னீர் செல்வம், கே. பிச்சை முத்து, எம்.எல்.ஏ ஹசன், ஹாஜா முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தொழிற்சங்கத்தினர், கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 40 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு செல்லியம்மன் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக அதிரை பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரை பேரூர் செயலாளர் என். காளிதாஸ் தலைமை வகித்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர்கள் கே. சோமசுந்திரம், வி ராமலிங்கம், எஸ்.பன்னீர் செல்வம், கே. பிச்சை முத்து, எம்.எல்.ஏ ஹசன், ஹாஜா முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தொழிற்சங்கத்தினர், கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 40 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு செல்லியம்மன் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.