ரிசர்வ் வங்கிப் பெயரைப் பயன்படுத்தி வரும் போலி இ-மெயிகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அந்த போலி இமெயில்களை நம்பி பொதுமக்கள் பணத்தைச் செலுத்த வேண்டாம் என்றும், பொதுமக்கள் பணம் ரிசர்வ் வங்கிக்கு தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ரகுராம் ராஜன் நேற்று பொது மக்களுக்கு எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார்.
மும்பையில் ஸ்டார்ட்அப் தலைவர்கள் மற்றும் வங்கிப் பணிக்கு பயிற்சி பெற்றவர்கள் கூட்டத்தில் பேசிய ராஜன் இதைக் குறிப்பிட்டார்.
அறக்கட்டளைகளில் உள்ள பணத்தை வாங்குவதற்காக ரிசர்வ் வங்கி சலுகை அறிவித்துள்ளது. இந்த சலுகையை பெற குறிப்பிட்ட அளவு பணத்தை செலுத்துங்கள் என வரும் இ-மெயில்கள் ரிசர்வ் வங்கி பெயரில் பணம் செலுத்த வேண்டும் என குறிப்பிடுகின்றன. இது போன்ற போலி மெயில்கள் வந்தால் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் இது போன்ற மெயில் அனுப் புபவர்கள் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் என்றார்.
இது தொடர்பாக விசாரிக்கும் விதமாக தினமும் பத்து மெயில்களாவது எனக்கு வருகிறது. ரிசர்வ் வங்கி இப்படி அறிவித்துள்ளதா இது பொய்யா உண்மையா என கேட்கிறார்கள். ரிசர்வ் வங்கி பொதுமக்களிடமிருந்து பணம் கேட்டு யாரொருவருக்கும் எப்போதும் மெயில் அனுப்பாது. ரிசர்வ் வங்கியிடம் அந்நிய செலாவணி கையிருப்பு மதிப்பு 36,000 கோடி டாலர் அளவுக்கு உள்ளது. 8 லட்சம் கோடி மதிப் புக்கு அரசின் கடன் பத்திரங் கள் உள்ளன. அதனால் பொதுமக் களின் பணம் ரிசர்வ் வங்கிக்கு தேவையில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
போட்டியில் வெற்றி பெற்றுள் ளீர்கள் என்றோ, லாட்டரில் பரிசு விழுந்திருக்கிறது, உங்களுக்கு ரூ.50 லட்சம் கிடைக்கும், இதற்கான பரிவர்த்தனை செலவுகளுக்கு ரூ.20 ஆயிரம் அனுப்பி வையுங்கள் என்று மெயில் வருகிறது என்றால் நம்ப வேண்டாம். சாதாரணமாக ஜங்க் இமெயில் என்று விட்டு விடுங்கள். இதை நம்பி பணம் அனுப்பி ஏமாற வேண்டாம்.
இதற்கிடையே ஒழுங்குமுறை அமைப்புக்கு உட்படும் முயற்சி களிலும் முயற்சித்து வருவதாக ரிசர்வ் வங்கி ராஜன் குறிப்பிட்டார். புதிய திட்டங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு எற்ப ரிசர்வ் வங்கி தகவமைத்துக் கொள்ளும் முயற்சிகளில் உள்ளதை தெரிவித்தார்.
பிரச்சினையை சரியாக புரிந்து கொள்வது, கவனமாக ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது, புதிய மாற்றங்களை உருவாக்குபவர்களுக்கு உதவி செய்வதற்கு ஏற்ப பொருந்திக் கொள்வது என்று இதனை அர்த்தப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் ராஜன் கூறினார்.
இது தொடர்பாக ரகுராம் ராஜன் நேற்று பொது மக்களுக்கு எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார்.
மும்பையில் ஸ்டார்ட்அப் தலைவர்கள் மற்றும் வங்கிப் பணிக்கு பயிற்சி பெற்றவர்கள் கூட்டத்தில் பேசிய ராஜன் இதைக் குறிப்பிட்டார்.
அறக்கட்டளைகளில் உள்ள பணத்தை வாங்குவதற்காக ரிசர்வ் வங்கி சலுகை அறிவித்துள்ளது. இந்த சலுகையை பெற குறிப்பிட்ட அளவு பணத்தை செலுத்துங்கள் என வரும் இ-மெயில்கள் ரிசர்வ் வங்கி பெயரில் பணம் செலுத்த வேண்டும் என குறிப்பிடுகின்றன. இது போன்ற போலி மெயில்கள் வந்தால் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் இது போன்ற மெயில் அனுப் புபவர்கள் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் என்றார்.
இது தொடர்பாக விசாரிக்கும் விதமாக தினமும் பத்து மெயில்களாவது எனக்கு வருகிறது. ரிசர்வ் வங்கி இப்படி அறிவித்துள்ளதா இது பொய்யா உண்மையா என கேட்கிறார்கள். ரிசர்வ் வங்கி பொதுமக்களிடமிருந்து பணம் கேட்டு யாரொருவருக்கும் எப்போதும் மெயில் அனுப்பாது. ரிசர்வ் வங்கியிடம் அந்நிய செலாவணி கையிருப்பு மதிப்பு 36,000 கோடி டாலர் அளவுக்கு உள்ளது. 8 லட்சம் கோடி மதிப் புக்கு அரசின் கடன் பத்திரங் கள் உள்ளன. அதனால் பொதுமக் களின் பணம் ரிசர்வ் வங்கிக்கு தேவையில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
போட்டியில் வெற்றி பெற்றுள் ளீர்கள் என்றோ, லாட்டரில் பரிசு விழுந்திருக்கிறது, உங்களுக்கு ரூ.50 லட்சம் கிடைக்கும், இதற்கான பரிவர்த்தனை செலவுகளுக்கு ரூ.20 ஆயிரம் அனுப்பி வையுங்கள் என்று மெயில் வருகிறது என்றால் நம்ப வேண்டாம். சாதாரணமாக ஜங்க் இமெயில் என்று விட்டு விடுங்கள். இதை நம்பி பணம் அனுப்பி ஏமாற வேண்டாம்.
இதற்கிடையே ஒழுங்குமுறை அமைப்புக்கு உட்படும் முயற்சி களிலும் முயற்சித்து வருவதாக ரிசர்வ் வங்கி ராஜன் குறிப்பிட்டார். புதிய திட்டங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு எற்ப ரிசர்வ் வங்கி தகவமைத்துக் கொள்ளும் முயற்சிகளில் உள்ளதை தெரிவித்தார்.
பிரச்சினையை சரியாக புரிந்து கொள்வது, கவனமாக ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது, புதிய மாற்றங்களை உருவாக்குபவர்களுக்கு உதவி செய்வதற்கு ஏற்ப பொருந்திக் கொள்வது என்று இதனை அர்த்தப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் ராஜன் கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.