.

Pages

Sunday, April 10, 2016

வாக்காளர் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நிகழ்ச்சி !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 12.04.2016 அன்று அணைக்கரை முதல் சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலை வரையிலும், கல்லணை முதல் தஞ்சாவூர் வரை நடைபெறவுள்ள வாக்காளர் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுலவர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமையில் செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இது குறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுதேர்தல் 2016 ஐ முன்னிட்டு. தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 100% நேர்மையாக வாக்களிப்பதன் அவசியத்தை வலியஜறுத்தி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்ட மன்றத் தொகுதிகளையும் இணைக்கும் வகையில் அணைக்கரை முதல் கடற்கரை வரை மற்றும் கல்லணை முதல் தஞ்சாவூர் வரையிலும் வாக்காளர் மனித சங்கிலி. வாக்காளர் விழிப்புணர்வு நடைபயணம் 100% நேர்மையாக வாக்களிக்க உறுதிமொழிஏற்பு போன்ற தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் எதிர்வரும் 12-04-2016 செவ்வாய் கிழமை காலை 9 மணி முதல் பணி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் திறளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் விழிப்புணர்வு பணிகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் விழிப்புணர்வு பார்வையாளராக முத்த ஆட்சிப்பணி அதிகாரி திரு.நர் சிங் தேவ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர்; 09-04-2016 முதல் 14-4-2016 வரை தேர்தல் விழிப்புணர்வு பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்ட மன்றத் தொகுதிகளிலும். 1113 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 2175 வாக்குச்சாவடி மையங்களிலும் அழப்படை வசதிகளான குழநீர் வசதி. கழிவறை வசதி. மின்சார வசதி. நிழற்குடை வசதி மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு எளிதாக வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்திட கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு மேற்கொள்ளு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் (அனைத்து வசதிகளும் கொண்ட) 4 மாதிரி வாக்குச்சாவடிகள் வீதம் 32 மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு மகளிர் வாக்குச்சாவடி அமைக்கப்படவுள்ளது. அதில் இடம்பெறவுள்ள அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள். பணியாற்ற உள்ள அரசு அலுவலர்களான வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள். காவலர்கள். வாக்கு எண்ணும் அலுவலர்கள் என முழுமையாகப் டிபண்களைக் கொண்ட அனைத்து மகளிர் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

100 மூ நெர்மையான வாக்குப்பதிவு நடைபெறுவதற்காக கிராம அளவிலான விழிப்புணர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த விழிப்புணர்வு குழு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள். சமுக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்காளர்களும் பணம் பெறாமலும். பரிசுப்பொருட்களை பெறாமலும் 100 மூ தூய்மையான முறையில் நேர்மையாக வாக்களிக்க இந்தக்குழுவானது விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள காவலர்கள், ஆசிரியர்கள், ஓட்டுநர்கள் மற்றும்  நடத்துநர்கள் ஆகியோர்கள் அஞ்சல் முலமாக வாக்களிக்க ஏதுவாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து புகார்களை பெறுவதற்காக தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நெரமும் அலுவலர்கள் பணிபுரிகிறார்கள். இதற்கான இலவச தொலைபெசி எண்கள் கீழ்க்கண்டவாறு உள்ளது.

1800 425 7036  மற்றும் 1077 (கட்டணமில்லா தொலைபெசி எண்)
வாட்ஸ்ஆப் முலம் புகார்களை அனுப்ப வேண்டிய அலைபெசி எண் 83000 23880
பொதுமக்கள் வாட்ஸ்ஆப் முலமாகவும் தங்களது புகார்களை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்திடலாம் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.சந்திரசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.கு.சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெய்னுலாப்தீன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் சந்திரா, துணை ஆட்சியர் (தேர்தல்) ராம்சந்தர், ஊராட்சிகள் உதவி இயக்குநர் கோபு, தேர்தல் வட்டாட்சியர் ராமலிங்கம், அரசு கேபிள் வட்டாட்சியர் திருமதி.மாலதி.  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் அலுவலர்கள். செய்தியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.