அதிராம்பட்டினம் ஏப்-10
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாரதியஜனதா கட்சி வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது.
கூட்டத்திற்கு தொகுதி பொறுப்பாளர் செம்பை கோவிந்தராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் மத்திய கப்பல் மற்றும் தரை வழி போக்குவரத்து இணை அமைச்சர் பொன். ராதகிருஷ்ணன் கலந்துகொண்டு வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். தனது உரையில், இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் வகையில் ஈசிஆர் இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும்' என்றார்.
முன்னதாக வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து பேசிய பாரதியஜனதா கட்சி தேசிய பொதுச்செயலாளர் முரளிதாரவ் தனது உரையில் 'கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இந்திய கடலில் மீன்பிடிக்க சென்ற 550 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். பாரதிய ஜனதா கட்சி பொறுப்பேற்ற பிறகு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவது குறைந்துள்ளது' என்றார்.
முன்னதாக பேசிய பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பு முருகானந்தம் தனது உரையில், அதிராம்பட்டினத்தில் தீயணைப்பு நிலையம் அமைப்பது, அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்துவது, அதிராம்பட்டினத்தில் மீன்கள் விற்பனை கூடம் அமைத்து தருவது, அதிராம்பட்டினம் - பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ஏரியை மேம்படுத்தி படகு சவாரி அமைப்பது, பட்டுக்கோட்டை புறநகர் வழிச்சாலை பணியை விரைந்து முடிப்பது, பட்டுக்கோட்டையில் தென்னை கொப்பரை கொள்முதல் நிலையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை தொகுதி மக்களுக்கு அளித்தார். இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாரதியஜனதா கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாரதியஜனதா கட்சி வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது.
கூட்டத்திற்கு தொகுதி பொறுப்பாளர் செம்பை கோவிந்தராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் மத்திய கப்பல் மற்றும் தரை வழி போக்குவரத்து இணை அமைச்சர் பொன். ராதகிருஷ்ணன் கலந்துகொண்டு வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். தனது உரையில், இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் வகையில் ஈசிஆர் இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும்' என்றார்.
முன்னதாக வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து பேசிய பாரதியஜனதா கட்சி தேசிய பொதுச்செயலாளர் முரளிதாரவ் தனது உரையில் 'கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இந்திய கடலில் மீன்பிடிக்க சென்ற 550 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். பாரதிய ஜனதா கட்சி பொறுப்பேற்ற பிறகு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவது குறைந்துள்ளது' என்றார்.
முன்னதாக பேசிய பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பு முருகானந்தம் தனது உரையில், அதிராம்பட்டினத்தில் தீயணைப்பு நிலையம் அமைப்பது, அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்துவது, அதிராம்பட்டினத்தில் மீன்கள் விற்பனை கூடம் அமைத்து தருவது, அதிராம்பட்டினம் - பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ஏரியை மேம்படுத்தி படகு சவாரி அமைப்பது, பட்டுக்கோட்டை புறநகர் வழிச்சாலை பணியை விரைந்து முடிப்பது, பட்டுக்கோட்டையில் தென்னை கொப்பரை கொள்முதல் நிலையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை தொகுதி மக்களுக்கு அளித்தார். இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாரதியஜனதா கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.