.

Pages

Thursday, April 7, 2016

அதிரை அருகே நடந்த கத்தி குத்தில் மனைவி பரிதாப பலி: கணவன் வெறிச்செயல் !

அதிராம்பட்டினம் ஏப்-07
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள கீழத்தோட்டம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் சித்திரவேல் ( வயது 40 ). கடல் மீன் பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி இளஞ்சியம் ( வயது 33 ) இவர்களுக்கு மணிகண்டன் ( வயது 13 ) சூர்யா ( வயது 12 ), காளி ( வயது 10 ), வழுதியம்மாள் ( வயது 4 ), ஐஸ்வர்யா ( வயது 2 ) குழந்தைகள் உள்ளனர்.

சித்திரவேலுக்கு தினமும் மது அருந்தும் பழக்கம் இருந்து வருகிறது. இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றியதில் வலை பின்னும் கத்தியால் மனைவியின் நெஞ்சு பகுதியில் சராமாரியாக குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இறந்த உடலை அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் பிரத பரிசோதனைக்காக வைத்துள்ளனர். இதுகுறித்து பலியான இளஞ்சியம் தங்கை முல்லையம்மாள் அளித்த புகாரின் பேரில் அதிரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாகிய கொலையாளி சித்திரவேலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.