தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1980 ஆம் ஆண்டும் முதல் ஆசிரியையாக பணியாற்றியவர் ஆஃப்தா பேகம். இவர் காதிர் முகைதீன் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் பர்கத் அவர்களின் துணைவியார் ஆவார். கடந்த ஆண்டுகளாக பள்ளியின் முதல்வராக சிறப்பாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 27-04-2016 அன்று பள்ளியிலிருந்து பணி ஓய்வு பெற்றார். இவரது சிறப்பான பணியை பாராட்டி பள்ளி நிர்வாகம் - பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி பணியாளர்கள் சார்பில் பாராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி மூத்த முதல்வர் பர்கத் தலைமை வகித்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் ஓகேஎம் சிபஹத்துல்லா, முஹம்மது சலீம், பேராசிரியை எம்.ஏ தஸ்லீமா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளி ஆசிரியர்கள் - பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் பள்ளி முதல்வர் ஆஃப்தா பேகம் பள்ளியில் பணிபுரிந்த காலத்தில் ஆற்றிய கல்வி பணிகள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி பணியாளர்கள் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நீங்கள் செய்த சேவை மகத்தானது .அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் ,மறுமையிலும் நற்கூலியை வழங்குவானாக ! ஆமீன்!
ReplyDeleteஅல்லாஹ் உங்களுக்கு இம்மைலும், மறுமையிலும் பரக்கத் செய்வானாக...
ReplyDeleteஎனது மதிப்பிற்குரிய ஆசான் நீங்கள் செய்த பனி மிக சிறப்பானது உடலளவில் நீங்க ஓய்வுபெற்றாலும் உள்ளத்தால் அதிரையினர் உங்களுக்கு ஓய்வளிக்க மாட்டார்கள் அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் ,மறுமையிலும் நற்கூலியை வழங்குவானாக ! ஆமீன்!
ReplyDeleteஎனது மதிப்பிற்குரிய ஆசான் நீங்கள் செய்த பனி மிக சிறப்பானது உடலளவில் நீங்க ஓய்வுபெற்றாலும் உள்ளத்தால் அதிரையினர் உங்களுக்கு ஓய்வளிக்க மாட்டார்கள் அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் ,மறுமையிலும் நற்கூலியை வழங்குவானாக ! ஆமீன்!
ReplyDeleteஎனது மதிப்பிற்குரிய ஆசான் நீங்கள் செய்த பனி மிக சிறப்பானது நீங்கள் எங்களுக்கு செய்த சேவை மகத்தானது.அல்லாஹ் இம்மையிலும் உங்களுக்கு நல்ல சுகத்தையும், ஆரோகியதையும்,அருள் புரிவான்னாக ஆமீன்,மறுமையிலும் நற்கூலியை வழங்குவானாக! ஆமீன்!
ReplyDelete