.

Pages

Thursday, April 28, 2016

பணி ஓய்வு பெற்ற இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி முதல்வர் ஆஃப்தா பேகத்திற்கு பாராட்டு !

அதிராம்பட்டினம் ஏப்-28
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1980 ஆம் ஆண்டும் முதல் ஆசிரியையாக பணியாற்றியவர் ஆஃப்தா பேகம். இவர் காதிர் முகைதீன் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் பர்கத் அவர்களின் துணைவியார் ஆவார்.  கடந்த ஆண்டுகளாக பள்ளியின் முதல்வராக சிறப்பாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 27-04-2016 அன்று பள்ளியிலிருந்து பணி ஓய்வு பெற்றார். இவரது சிறப்பான பணியை பாராட்டி பள்ளி நிர்வாகம் - பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி பணியாளர்கள் சார்பில் பாராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு பள்ளி மூத்த முதல்வர் பர்கத் தலைமை வகித்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் ஓகேஎம் சிபஹத்துல்லா, முஹம்மது சலீம், பேராசிரியை எம்.ஏ தஸ்லீமா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளி ஆசிரியர்கள் - பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் பள்ளி முதல்வர் ஆஃப்தா பேகம் பள்ளியில் பணிபுரிந்த காலத்தில் ஆற்றிய கல்வி பணிகள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி பணியாளர்கள் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

5 comments:

  1. நீங்கள் செய்த சேவை மகத்தானது .அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் ,மறுமையிலும் நற்கூலியை வழங்குவானாக ! ஆமீன்!

    ReplyDelete
  2. அல்லாஹ் உங்களுக்கு இம்மைலும், மறுமையிலும் பரக்கத் செய்வானாக...

    ReplyDelete
  3. எனது மதிப்பிற்குரிய ஆசான் நீங்கள் செய்த பனி மிக சிறப்பானது உடலளவில் நீங்க ஓய்வுபெற்றாலும் உள்ளத்தால் அதிரையினர் உங்களுக்கு ஓய்வளிக்க மாட்டார்கள் அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் ,மறுமையிலும் நற்கூலியை வழங்குவானாக ! ஆமீன்!

    ReplyDelete
  4. எனது மதிப்பிற்குரிய ஆசான் நீங்கள் செய்த பனி மிக சிறப்பானது உடலளவில் நீங்க ஓய்வுபெற்றாலும் உள்ளத்தால் அதிரையினர் உங்களுக்கு ஓய்வளிக்க மாட்டார்கள் அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் ,மறுமையிலும் நற்கூலியை வழங்குவானாக ! ஆமீன்!

    ReplyDelete
  5. எனது மதிப்பிற்குரிய ஆசான் நீங்கள் செய்த பனி மிக சிறப்பானது நீங்கள் எங்களுக்கு செய்த சேவை மகத்தானது.அல்லாஹ் இம்மையிலும் உங்களுக்கு நல்ல சுகத்தையும், ஆரோகியதையும்,அருள் புரிவான்னாக ஆமீன்,மறுமையிலும் நற்கூலியை வழங்குவானாக! ஆமீன்!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.