.

Pages

Friday, April 8, 2016

ஊர்க்காவல் படையில் இணைந்து சேவை புரியும் அதிரை இளைஞர்கள் !

நல்லொழுக்கமும், சேவை மனப்பான்மையும்தான் ஊர்க்காவல் படையினருக்குத் தேவையான தகுதி. வயது 18ல் இருந்து 50 க்குள் உள்ள விளையாட்டு, சமூகசேவை, காராத்தே போன்றவைகளில் சிறப்பு தகுதி உள்ளவர்கள் ஊர்க்காவல் படையில் சேர்ந்து பணியாற்றலாம்.

மக்களுக்கு பாதுகாப்பு அளித்தல், குற்றங்களை குறைத்தல், சுகாதாரம், கல்வி உள்ளி ட்ட வசதிகளை செய்து கொடுத்தல் அரசின் முக்கிய வேலை. இதெல்லாம் அன்றாட பணிகள் என்பதால் அரசின் பணியாளர்களை கொண்டு நிறைவேற்றப்படுகிறது. ஆனால், இக்கட்டான மற்றும் அவசர காலங்களில் கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுவதை கருத்தில் கொண்டே ஊர்காவல்படை துவங்கப்பட்டன.

ஆரம்பகட்டத்தில், கலவர காலங்களில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த ஊர் காவல்படையினர் பின்னர், விபத்துகளில் உதவி புரியவும் ஈடுபடுத்தப்பட்டனர். அதன் படி, சுனாமி மீட்பு பணியில் ஊர்காவல்படையின் பங்கு சிறப்புக்குரியது. இவ்வீரர்கள் பாதுகாப்பு, போக்குவரத்து சீர்செய்தல் மட்டுமின்றி பல்வேறு விழிப்புணர்வு பணிகளிலும் ஈடுபடுகின்றனர்.

விளையாட்டில், பொதுச்சேவையில் அதிக ஈடுபாடுடைய தன்னார்வ அதிரை இளைஞர்கள் பைசல் அஹமது, ராஜிக் அஹமது, தவ்பீக் ரஹ்மான் உள்ளிட்ட பலர் ஊர்க்காவல் படையில் இணைத்துக்கொண்டு சேவை புரிந்து வருகின்றனர். இவர்களது பொதுநல சேவை பணியை சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
 

5 comments:

  1. இவர்களுக்கு சம்பளம்....?

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் இது போன்ற அரசின் அதிகார அமைப்புகளில் நம் இளைய சமுதாய மாணவர்கள் பங்களிப்புகளை செலுத்துவது இக்காலத்தில் அவசியம்
    இந்த இளைஞர்களின் சமூக சேவை மற்ற மாணவர்களுக்கும் ஊக்கத்தை கொடுக்கும்

    பார்க்கவே சந்தோஷமாக இருக்கு இவர்களுக்கு அல்லாஹ் இன்னும் பல சாதனைகள் புரிய அருள் செய்வானாக

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் இது போன்ற அரசின் அதிகார அமைப்புகளில் நம் இளைய சமுதாய மாணவர்கள் பங்களிப்புகளை செலுத்துவது இக்காலத்தில் அவசியம்
    இந்த இளைஞர்களின் சமூக சேவை மற்ற மாணவர்களுக்கும் ஊக்கத்தை கொடுக்கும்

    பார்க்கவே சந்தோஷமாக இருக்கு இவர்களுக்கு அல்லாஹ் இன்னும் பல சாதனைகள் புரிய அருள் செய்வானாக

    ReplyDelete

  4. பார்க்கவே சந்தோஷமாக இருக்கு இவர்களுக்கு அல்லாஹ் இன்னும் பல சாதனைகள் புரிய அருள் செய்வானாக

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.