மக்களுக்கு பாதுகாப்பு அளித்தல், குற்றங்களை குறைத்தல், சுகாதாரம், கல்வி உள்ளி ட்ட வசதிகளை செய்து கொடுத்தல் அரசின் முக்கிய வேலை. இதெல்லாம் அன்றாட பணிகள் என்பதால் அரசின் பணியாளர்களை கொண்டு நிறைவேற்றப்படுகிறது. ஆனால், இக்கட்டான மற்றும் அவசர காலங்களில் கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுவதை கருத்தில் கொண்டே ஊர்காவல்படை துவங்கப்பட்டன.
ஆரம்பகட்டத்தில், கலவர காலங்களில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த ஊர் காவல்படையினர் பின்னர், விபத்துகளில் உதவி புரியவும் ஈடுபடுத்தப்பட்டனர். அதன் படி, சுனாமி மீட்பு பணியில் ஊர்காவல்படையின் பங்கு சிறப்புக்குரியது. இவ்வீரர்கள் பாதுகாப்பு, போக்குவரத்து சீர்செய்தல் மட்டுமின்றி பல்வேறு விழிப்புணர்வு பணிகளிலும் ஈடுபடுகின்றனர்.
விளையாட்டில், பொதுச்சேவையில் அதிக ஈடுபாடுடைய தன்னார்வ அதிரை இளைஞர்கள் பைசல் அஹமது, ராஜிக் அஹமது, தவ்பீக் ரஹ்மான் உள்ளிட்ட பலர் ஊர்க்காவல் படையில் இணைத்துக்கொண்டு சேவை புரிந்து வருகின்றனர். இவர்களது பொதுநல சேவை பணியை சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இவர்களுக்கு சம்பளம்....?
ReplyDeleteமாஷா அல்லாஹ் இது போன்ற அரசின் அதிகார அமைப்புகளில் நம் இளைய சமுதாய மாணவர்கள் பங்களிப்புகளை செலுத்துவது இக்காலத்தில் அவசியம்
ReplyDeleteஇந்த இளைஞர்களின் சமூக சேவை மற்ற மாணவர்களுக்கும் ஊக்கத்தை கொடுக்கும்
பார்க்கவே சந்தோஷமாக இருக்கு இவர்களுக்கு அல்லாஹ் இன்னும் பல சாதனைகள் புரிய அருள் செய்வானாக
மாஷா அல்லாஹ் இது போன்ற அரசின் அதிகார அமைப்புகளில் நம் இளைய சமுதாய மாணவர்கள் பங்களிப்புகளை செலுத்துவது இக்காலத்தில் அவசியம்
ReplyDeleteஇந்த இளைஞர்களின் சமூக சேவை மற்ற மாணவர்களுக்கும் ஊக்கத்தை கொடுக்கும்
பார்க்கவே சந்தோஷமாக இருக்கு இவர்களுக்கு அல்லாஹ் இன்னும் பல சாதனைகள் புரிய அருள் செய்வானாக
Masha Allah
ReplyDelete
ReplyDeleteபார்க்கவே சந்தோஷமாக இருக்கு இவர்களுக்கு அல்லாஹ் இன்னும் பல சாதனைகள் புரிய அருள் செய்வானாக