தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளி கந்தூரி எதிர்வரும் 08-04-2016 அன்று கந்தூரி ஊர்வலமும், இதை தொடர்ந்து 18-04-2016 அன்று சந்தனக்கூடு விழா நடைபெற இருப்பதாக கந்தூரி விழா குழுவினர் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் கந்தூரி விழா தொடர்பாக விழா கமிட்டியினருக்கும், அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட அமைப்பிற்கும் இடையே ஏற்பட்டுள்ள கொள்கை கருத்து வேறுபாடால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்புள்ளது என கருதி, இது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் இன்று பகல் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் குருமூர்த்தி முன்னிலையில் நடந்தது.
இந்த அமைதி பேச்சுவார்த்தையில் கந்தூரி விழா கமிட்டியின் சார்பில் எம்.எம் முஹம்மது இப்ராஹீம், உபைதூர் ரஹ்மான், சுல்தான், பைத்துல் ரஹ்மான் ஆகிய 4 பேர்களும், அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பில் செயலர் ஜமீல் எம் ஸாலிஹ், மீடியா மேஜிக் நிஜாமுதீன் ஆகியோரும், தமுமுக சார்பில் அஹமது ஹாஜா, கமாலுத்தீன் ஆகியோரும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளைகள் சார்பில் எம்.கே.எம் ஜமால் முஹம்மது, ராஜிக் அஹமது, அல்லாபிச்சை, பக்கீர் முகைதீன் மற்றும் வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் அருண் மொழி, அதிரை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் உதவி ஆய்வாளர் சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அமைதி பேச்சுவார்த்தை முடிவில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது:
1. ஊர்வலத்தை மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிக்குள் முடிக்க வேண்டும்.
2. ஊர்வலம் செல்லும் பாதையில் வெடி வெடிக்க கூடாது.
3. மேலத்தெரு அல் பாக்கியத்தூஸ் சாலிஹாத் பள்ளி வாசல் பகுதி, நடுத்தெரு, புதுமனைத்தெரு, சிஎம்பி லேன், ஆஸ்பத்திரி லேன் உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலம் செல்லக்கூடாது.
4. விழா குழுவினர் கந்தூரி விழாவில் பங்கேற்று செல்ல வேண்டும்.
5. ஊர்வலத்தில் 1 கொடி, 1 பள்ளாக்கு, 5 உருப்படி மட்டுமே அனுமதி.
6. பள்ளிவாசல்கள் முன்னும், பின்னும் 100 மீட்டர் இடைவெளியில் வாத்திய இசை இசைக்ககூடாது.
7. ஊர்வலத்தில் சிறுவர்கள், பெரியவர்கள் ஆடி, பாடி செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
8. கந்தூரி விழா எதிர்தரப்பினர் சட்ட ஒழுங்கு எங்களால் பாதிக்கப்படாது எனவும், கந்தூரி விழாவிற்கு எங்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது எனவும் தெரிவித்தனர்.
9. விழாவில் சட்ட ஒழுங்கு பாதிக்கும் வகையில் அசம்பாவிதம் ஏற்படுமாயின் விழா குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
10. தேர்தல் நடத்தை விதி முறை அமலில் உள்ளதால் எந்த ஒரு கட்சி சின்னமோ, இதர கட்சி வர்ணங்களோ, இடம் பெறாமல் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதிக்கப்படுகிறது.
11. பொதுமக்கள் மற்றும் தேர்வு எழுதும் மாணவர்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது.
12. காவல்துறை நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடத்த வேண்டும்.
13. மேற்காணும் நடவடிக்கைகள் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளின் படி வீடியோ பதிவு செய்யப்படும்.
மேற்கண்ட நிபந்தனைகள் மீறப்பட்டதாக தெரிய வந்தால் மேற்படி தேர்தல் நடத்தை விதிகளின் படி வழக்குகள் தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
பொதுநலப் பிரச்சனைய கையில் எடுக்கிறோமோ இல்லையோ தர்ஹா பிரச்னை வருடந்தோறும் எடுத்து தங்களது அமைப்பை நினைவுப் படுத்திக்கொள்கிறார்கள். நாட்டில் இப்போ எவ்வளவோ பிரச்சனைகள் உருவெடுத்து விட்டது அதற்கெல்லாம் குரலை காணோம். பாரதமாதா ...இப்படியொரு ஸ்லோகன் சொன்னால் தான் நாட்டுப்பற்று இல்லையே தேசதுரோகி ..நாட்டை விட்டுப் போ இப்படி மாதமொரு RSS தலைவர்கள் அறிக்கை விடுகிறார்கள்..எதோ தமிழகம் அமைதியாக இருக்கு இருந்தாலும் நாம் சுதாரிப்பாக இருக்கணும். கந்தூரி ஊர்வலம் நிறுத்திவிட்டால் ECR ரோட்டில் நடக்கும் மரண விபத்து நின்று விடும்.. சமுதாயத்தில் நடக்கும் மற்ற பிரச்னை முடிவுக்கு வரும், நாளை அரசியல் ஊருவலம் இவர்களின் தேர்வுக்குள் வராமல் நின்று விடும்...? ": போக்கத்த பசங்களுக்கு வேற வேலை " என்று சொல்லுவதுப் போல் இவர்களின் செயல்பாடாக இருக்கு. வாகனத்தையும் பைக்கையும் எடுத்துக் கொண்டு ஊரு சுத்த போய்டுறாங்க வீட்டுல இருக்கிறவங்களுக்கு குழந்தைகளுக்கு கந்தூரி ஒரு பொழுது போக்கு அம்சமாக இருக்கு ...
ReplyDeleteUnmai than sariyaha sonnirgal
ReplyDeleteஎங்கையோ இடிக்குதே ஹராமுக்கு நிபந்தனையா? facebook யில் வீடியோ கிளிப் பார்த்தேன் சிலை செய்பவர் சொல்லுகிறார் எத்தனை கிலோ சிலை வேண்டும் தருகிறேன் ஆனால் சக்தி உள்ள சிலை கேட்டால் என்னால் கொடுக்க முடியாது.தர்காவில் சக்தி இருக்கு என்று தானே நினைத்து இங்கே வேண்டுதல் வைப்பதும் அடுத்த கந்துரியில் காணிக்கை செலுத்துவதும் இங்கே நடக்கின்றது.நமக்கு தெரிந்த மொழியில் திரு குரானை படித்தால் புரியும் இறந்தவர் நிலை என்ன என்று. குழந்தைகளுக்கு இறுக்கு பொழுதுப்போக்கு பல இடம் வேண்டாம் இந்த ஹராமான இடம்.
ReplyDeleteஇத்தனை நிபந்தனைகள் வைத்தும் கந்தூரியை நடத்தி கேவலப்படுவோம் என்கிற அவர்களின் உறுதி ஏன் சத்தியத்தை நிலைநாட்ட தவறுகிறது இன்னும் எத்தனை காலம் இந்த அறியாமை !! மேலே ஒரு சகோதரர் கந்தூரியை பொழுது போக்கு என்கிறார் அப்படி என்றால் குடும்பத்தோடு சினிமா தியேட்டருக்கு பொழுது போக்கு என்று போவது சரியா ?? இன்னும் நம் வீட்டு மக்கள் மார்க்கம் தடுத்துள்ள அனைத்து பொழுது போக்கு அம்சங்களிலும் பொழுதை கழிப்பது சரியா? அல்லது சும்மா வெருமனே பொழுதை போக்குவதுதான் சரியா படைத்தவனின் நோக்கத்தையும் மனிதர்கள் நான் படைக்கப்பட்ட நோக்கத்தையும் சிந்தித்தால் நமக்கு அநாவசியமான மார்கத்துக்கு முரணான பொழுது போக்கு தேவை இருக்குமா ??
ReplyDelete