.

Pages

Thursday, February 28, 2013

வாகன விபத்தில் அதிரை வாலிபன் பலத்த காயம் !

அதிரை கீழத்தெரு – புதுக்குடி நெசவுத்தெருவைச் சார்ந்தவர் ஜெஹபர் அலி. இவர் டீக்கடை யூனுஸ் [ கடைத்தெரு ] அவர்களின் மருமகனார் ஆவார்.

இன்று [ 28-02-2013 ] மாலை 5.45 மணியளவில் பிலால் நகர் அருகே சேதுபெருவழிச்சாலையில் [ ECR  ] இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிராக்டர் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக த.மு.மு.க ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்த அதிரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து டிராக்டர் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்குள்ளான வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.







6 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    எவ்வளவு விழிப்புணர்வோடு இருந்தாலும் விபத்துகள் குறைந்தபாடில்லை.

    தகவலுக்கும் நன்றி.

    ReplyDelete
  2. அடுத்தடுத்து விபத்துக்கள் நமதூரில் அதிகரித்து கொண்டே போவதால் வாகன ஓட்டிகளுக்கு வாகன விதிமுறைகளை கடை பிடிக்க பெரு வழிச்சாலைகளில் போர்ட் எழுதி வைக்க வேண்டும்.

    ReplyDelete
  3. எவ்வளவு விழிப்புணர்வோடு இருந்தாலும் விபத்துகள் குறைந்தபாடில்லை.

    ReplyDelete
  4. அடுத்தடுத்து விபத்துக்கள் நமதூரில் அதிகரித்து கொண்டே போவதால் வாகன ஓட்டிகளுக்கு வாகன விதிமுறைகளை கடை பிடிக்க பெரு வழிச்சாலைகளில் போர்ட் எழுதி வைக்க வேண்டும், மேலும் விபத்துக்குள்ளான சகோ ஜெஹபர் அலி அவர்கள் நல்ல சுகம் பெற வல்ல ரஹ்மானிடம் நாம் துவ செய்வோமாக ஆமின்.

    ReplyDelete
  5. தஞ்சையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சகோ. ஜகாபர்அலி குணமடைந்து வருவதாக நண்பர்களின் வட்டத்திலிருந்து நல்ல செய்தி வந்துள்ளது.

    மேலும் பூரண குணமடைந்து மாமூலான பணிக்கு திரும்ப எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தி துஆ செய்வோம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.