.

Pages

Sunday, June 30, 2013

அதிரையில் மாபெரும் வீட்டு மனைகள் கண்காட்சி !

அதிரை சேது பெருவழிச்சாலையை ஒட்டிய பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட ஹசன் நகரில் வீட்டு மனைகள் கண்காட்சி இன்று [ 30-06-2013 ] மாலை 4.30 மணியளவில் துவங்கியது.
கிரீன் ரியல் புரோமோட்டர்ஸ் நிறுவனத்தினர் கண்காட்சியில் கலந்துகொண்ட ஏராளமான அதிரையர்களிடம் சுவைமிக்க குடிநீர் வசதி, இதயம் தொடும் தென்றல் காற்று, அனைத்து பாதைகளும் 30 அடி மற்றும் 23 அடிகளைக் கொண்ட தார்சாலை, தொழுகைக்கான பள்ளி, மின்சார வசதி, சிறுவர் பூங்கா ஆகிய சிறப்பம்சங்களை சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிறுவனத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இன்றைய கண்காட்சியில் ஏரளாமான பெண்கள் உள்ளிட்ட தொழில் அதிபர்கள், வியாபாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மனைகளை முன்பதிவு செய்துவருகின்றனர். இன்று முன்பதிவு செய்தவர்களுக்கு சிறப்பு பரிசாக இரண்டு கிராம் தங்க நாணயம் கண்காட்சியில் வழங்கப்பட்டது.










அதிரை AFCC'ன் 5 இளம் வீரர்கள் முப்பது பேர்க்கொண்ட குழுவிற்கு தேர்வு!

அல்ஹம்துல்லிலாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே..!


தஞ்சாவூர்  கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்டத்திற்கான தகுதி சுற்றுப்போட்டியில் தமது அணியினரை அழைத்து மொத்தம் 11 பேர் தஞ்சாவூர் சென்றனர் அவர்களில் ஐந்து பேர் முப்பது பேர்க்கொண்ட குழுவில் தகுதி பெற்றுள்ளனர்

19 வயதிற்குட்பட்டவர்கள் பட்டியலில் அதிரை AFCC அணியின் 

1, ஃபாயாஸ் -  All - Rounder'க தகுதி 

2, இப்ராஹிம்  (தீன்னுல்  ஹக் பிரதர்) - தகுதி பெறவில்லை 
3, முபீன் - தகுதி பெறவில்லை 

மற்றும்  22 வயதிற்குட்பட்டவர்கள்  தகுதி சுற்றில் பங்கு பெற்ற அதிரை AFCC'ன் இளம் வீரர்கள் 

1, ஃபவாஜ் - மட்டை வீச்சாளராக தகுதி  
2, நிஜார்  MT - மட்டை வீச்சாளராக தகுதி  
3, ஃ ஜிப்ரி - All - Rounder'க தகுதி 
4, வஹாப் - சுழற்பந்து வீச்சாளராக தகுதி

5, ஜாஸிம் - தகுதி பெறவில்லை 
6, இப்ராஹீம் - தகுதி பெறவில்லை 
7, சாதிக் - தகுதி பெறவில்லை 
8, முஸ்தஃபா - தகுதி பெறவில்லை 


இவர்களின் தகுதி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகளுடனும் தகுதியை இழந்த வீரகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்து தகுதியிழந்த வீரர்கள் தங்களின் பயிற்சியில் தீவிரம் காட்டி இன்ஷா அல்லாஹ் வரும் ஆண்டில் இதேபோன்றொரு தகுதி சுற்றியில் மாவட்ட அளவிலான தகுதி பெற அல்லாஹ்விடம் தூஆ கேட்போம்..இன்ஷா அல்லாஹ் 

தகுதி பெற்ற  அதிரை AFCC'ன் இளம் வீரர்களை உள்ளம் குளிர வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்து மகிழ்கின்றது  AFCC நிர்வாகம்..அல்ஹம்துல்லில்லாஹ் 

இங்ஙனம் 
AFCC - நிர்வாகம்

விறுவிறுப்புடன் நடந்த கால்பந்தாட்டத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட அதிரை அணியினர் !

அதிரை இளைஞர் கால்பந்துக் கழகம், மர்ஹூம் S.S.M. குல் முஹம்மத் அவர்களின் நினைவாக நடத்தும் 19 ஆம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி நமதூர் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் கடந்த சில நாட்களாக சிறப்பாக நடந்து வந்தன. இதில் பல்வேறு ஊர்களிலிருந்து வருகை தந்த கால்பந்தாட்ட வீரர்கள் பலர் போட்டிகளில் பங்கு பெற்று விளையாடி வந்தனர்.


இன்று [ 30-06-2013 ] மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அதிரை அணியினரோடு கண்டனூர் 7 கண்டனூர் அணியினர் மோதினர். விறு விருப்புடன் நடந்துவந்த ஆட்டத்தின் இறுதியில் கண்டனூர் அணியினர் மூன்று கோல் போட்டு 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.

முன்னதாக சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட அதிரை காவல்துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன் அவர்கள் இன்றைய முதல் ஆட்டத்தை துவக்கி வைத்தார். இன்றைய முதல் ஆட்டத்தைக் காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர்.

அதிரை இந்தியன் வங்கி மேலாளர் மீது குற்றச்சாட்டு ! மனுவை மண்டல அலுவலருக்கு அனுப்பி வைத்த பொதுமக்கள் !

அதிரையில் செயல்படும் இந்தியன் வங்கியின் மேலாளர் மீது குற்றச்சாட்டு குறித்த மனுவை பொதுமக்களில் சிலர் மண்டல அலுவலருக்கு அனுப்பி வைத்தனர்.


குறிப்பு : 
இன்று விடுமுறை தினமாக இருப்பதால் வங்கியின் மேலாளர் அவர்களைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. விரைவில் மேலாளர் அவர்களை தொடர்பு கொண்டு குற்றச்சாட்டுக் குறித்து அவரின் கருத்தைப் பெற்று தளத்தில் பதிய முயற்சிக்கப்படும்.

தஞ்சாவூர் கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்டத்திற்கான தகுதி சுற்றுப்போட்டிக்கு AFCC அணியினருக்கு அழைப்பு !

அல்ஹம்துல்லிலாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே..!

தஞ்சாவூர் கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்டத்திற்கான தகுதி சுற்றுப்போட்டியில் நமது AFCC அணியினரை அழைத்துள்ளார்கள். 

19 வயதிற்குட்பட்டவர்கள் பட்டியலில் அதிரை AFCC அணியின் இளம் வீரர்கள் தற்பொழுது தஞ்சாவூர் சென்றுள்ளனர்...

1, ஃபாயாஸ்
2, இப்ராஹிம் (தீன்னுல் ஹக் பிரதர்)
3, முபீன்

இன்று மதியம் சரியாக 2.30 மணியளவில் 22 வயதிற்குட்பட்டவர்கள் தகுதி சுற்றில் பங்கு பெற இருகிறார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்

அதில் பங்கு பெரும் அதிரை AFCC அணியின் இளம் வீரர்கள்

1, ஃபாவாஜ்
2, இப்ராஹீம்
3, ஃ ஜிப்ரி
4, சாதிக்
5, ஜாஸிம்
6, நிஜார் MT
7, வஹாப்

8, முஸ்தஃபா

இவர்கள் அனைவரும் தகுதி சுற்றில் தகுதி பெற்று மாவட்ட அளவிலான பல கிரிக்கெட் போட்டியில் பங்கு பெரும் வாய்ப்பினை அல்லாஹ் தந்தருள்ள தூஆ செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

இங்ஙனம்
AFCC - நிர்வாகம்

Saturday, June 29, 2013

அதிரையில் குடிநீர் விநியோகம் தடை ! பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு !

அதிரை நகருக்கு குடிநீர் சப்ளை அருகில் உள்ள விலாரிக்காடு பகுதியில் அமைந்துள்ள அதிக திறன் கொண்ட நீர் மூழ்கி மோட்டார் பம்ப் மூலம் தண்ணீர் எடுத்து அதிரையில் இருக்கிற நீர் தேக்கத் தொட்டிகளில் சேமித்து வைத்து வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிக மின்சார சப்ளைக் காரணமாக நீர் மூழ்கி மோட்டார் பம்ப்கள் பழுதடைந்து விட்டதால் அதிரையின் முக்கியப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிப்பதில் தடங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிரை மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இதுகுறித்து பேரூராட்சி தொடர்புடைய அலுவலரிடம் விசாரித்த வகையில்... 'துரிதமாக வேலைகள் நடந்து வருவதாகவும், விரைவில் பழுதுகள் சரி செய்யப்பட்டு சீராக குடிநீர் வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும்' எனத் தெரிவித்தார்.

துபாய் - சவூதி வாழ் அதிரையர்களுக்கு மக்தூம் பள்ளி நிர்வாகக் கமிட்டியினரின் அன்பான வேண்டுகோள் !

துபாய் - சவூதி வாழ் அதிரையர்களுக்கு மக்தூம் பள்ளி நிர்வாகக் கமிட்டியினரின் அன்பான வேண்டுகோள் !



பல வருடங்களாக பாழடைந்துபோன கடைத்தெரு மீன் மார்க்கெட் - புதுத்தெரு பாதை பயன்பாட்டிற்கு திறப்பு !

அதிரை பேரூராட்சிக்கு சொந்தமான 11 வது வார்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கடைத்தெரு மீன் மார்க்கெட்டை ஒட்டிய புதுத்தெருவுக்குச் செல்லும் பிரதான பாதை ஆகும். இவை கடந்த பல வருடங்களாக பொதுமக்களின் பயன்பாடு இன்றி முட்புதர்களாலும், மரங்களாலும் சூழ்ந்துகிடந்தன. மேலும் குப்பைக் கூளங்களும், கழிவுகளும் அதிகமாக கொட்டப்பட்டு வந்தன. இதனால் அப்பகுதியை சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது.





பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் குறிப்பாக மாணவிகள், பரப்பரப்பான பகுதியாகிய கடைத்தெருவைச் சுற்றி செல்லக்கூடிய சூழ்நிலை இருந்துவந்தது. மேலும் அதிரையின் முக்கிய தெருக்களை இணைக்கக்கூடிய பிரதான சாலையாக இவை இருப்பதால், மாணவ மாணவிகளோடு பொதுமக்களும், வர்த்தகர்களும் அவ்வப்போது சம்பந்தபட்டோருக்கு கோரிக்கை வைப்பது வாடிக்கையாக இருந்து வந்தது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே அதிரை பேரூராட்சி நிர்வாகம் இன்று [ 29-06-2013 ] காலை 8 மணி முதல் JCP இயந்திரம் மூலம் முட்புதர்கள், மரங்கள், குப்பைக்கழிவுகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். நடைபெறும் பணிகளை உடனிருந்து அதிரை பேரூராட்சித் தலைவர் SH. அஸ்லம் மற்றும் 'சமூக ஆர்வலர்' சாகுல் ஹமீத் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.

நீண்ட இடைவெளிக்குப்பின் செய்னாங் குளத்தின் புனரமைப்பு பணிகள் மும்முரம் !

அதிரை பேரூராட்சியின் சார்பாக 2012-2013 ஆம் ஆண்டுக்கான நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ், கீழத்தெரு மஹல்லாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள செய்னாங் குளம் – தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூபாய் 50 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு, இந்த பணிகளுக்கான ஒப்பந்தமும் இறுதி செய்யப்பட்டும் கடந்த சில மாதங்களாக இதற்குரிய பணிகள் துவங்குவதற்குரிய எவ்வித முகாந்திரமும் தென்படாமலும், மேலும் இக்குளத்தில் கலக்கின்ற அசுத்தங்களாலும், குப்பைக்கழிவுகளாலும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு இந்தக்குளத்தை சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு வைரஸ் தொற்று கிருமிகளால் நோய்கள் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதால், விரைவாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த இந்தப்பகுதி மக்களுக்கு சற்று ஆறுதலடைவது போல் உள்ளது கடந்த சில நாட்களாக செய்னாங் குளத்தின் புனரமைப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருவது.

இதற்காக இக்குளத்திலிருந்து அசுத்த நீர் வெளியேற்றப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் அக்குளத்தைச் சுற்றி தடுப்பு சுவர் அமைப்பதற்காக JCP இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வருகின்றன.







Friday, June 28, 2013

சவூதி ரியாத்தில் நடைபெற்ற அதிரை பைத்துல்மாலின் இரண்டாவதுக் கூட்டம் !

அதிரை பைத்துல்மால் பல்வேறு நாடுகளில் பல கிளைகளைக் கொண்டிருந்தாலும் சவூதி ரியாத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய கிளையொன்று தொடங்கியது. அன்றைய முதல் கூட்டத்தில் புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக கடந்த [ 14-06-2013 ] அன்று சவூதி ரியாத்தில் கிளைத்தலைவர் சகோதரர் சரபுதீன் அவர்களின் தலைமையில் இரண்டாவதுக் கூட்டம் கூட்டப்பட்டது.

நிகழ்ச்சியின் நிரலாக...

1. கிராத் : சகோதரர் முஹம்மது கமாலுதீன்

2. கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :

[ a ] கிளை உறுப்பினர்கள் ரமலான் மாத ஜக்காத்தின் குறிப்பிட்ட சதவீதத்தை அதிரை பைத்துல்மாலுக்கு வழங்குவது என முடிவுசெய்யப்பட்டது. 

[ b ]  பித்ரா தொகை நபர் ஒருவருக்கு தலா 15 ரியால் என நிர்ணயம் செய்து அவற்றை வசூல் செய்து தலைமையகத்துக்கு ரமலான் பிறை 20 க்குள் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.

[ c ] லாரல் பள்ளியில் கல்வி பயிலும் சமுதாய மாணவர்கள், தாய்மார்கள், அவ்வழியேச் செல்லும் பொதுமக்கள் ஆகியோர் நலன் கருதி அப்பகுதியில் சமுதாயக்கூடமொன்றை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது. இம்முயற்சியை தலைமையகம் மூலம் முன்னெடுத்து செல்வது என முடிவு செய்யப்பட்டது.

[ d ] ஜனாஸா குளிப்பட்டுவதற்குரிய உலோகத்தட்டு வாங்குவதற்குரிய பற்றாக்குறை செலவீனங்களை தெரியப்படுத்தினால் கிளையினர் பகிர்ந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டது.

[ e ] கிளை சார்பாக மே மாதம் வசூலிக்கப்பட்ட தொகை 590 ரியால்

[ f ] கிளை சார்பாக ஜூன் மாதம் வசூலிக்கப்பட்ட தொகை 600 ரியால்

[ g ]  அடுத்த மாதாந்திரக் கூட்டம் வருகின்ற  [ 12-07-2013 ] வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் ரியாத் வாழ் அதிரையர்கள் அனைவரும் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.

இறுதியாக கிளைத்தலைவர் சகோதரர் சரபுதீன் அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டு கூட்டம் இனிதே நிறைவுற்றன.

முத்துப்பேட்டை ஜும்மா பள்ளி திறப்பு விழா நிகழ்ச்சியில் அதிரையர்கள் பங்கேற்பு !

சேது பெருவழிச்சாலையில் அமையப்பெற்றுள்ள திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகரில் புதிதாக கட்டப்பட்ட மஸ்ஜீத் ஜூம்மா பள்ளியின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று [ 28-06-2013 ] வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகையுடன் சிறப்பாக நிறைவேறியது.
இதில் மார்க்க அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்துரைகளோடு சிறப்புரையும் நிகழ்த்தினார்கள். அதிரையர்கள் உள்ளிட்ட சுற்று வட்டார ஊர்களிலிருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆசாத் நகர் ஜும்மா பள்ளி நிர்வாகம் சார்பாக வந்திருந்த அனைவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.




மரண அறிவிப்பு [ சமையல் காசிம் அவர்களின் தாயார் ]

பிலால் நகரைச் சார்ந்த மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், சமையல் அப்துல் காசிம் அவர்களின் தாயார் பாத்திமா அம்மாள் அவர்கள் இன்று [ 28-06-2013 ] வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் பெரிய ஜும்மாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Thursday, June 27, 2013

TNTJ அதிரை கிளையினர் வழங்கிய வாழ்வாதார உதவி !

TNTJ அதிரை கிளையின் சார்பாக வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.
TNTJ அதிரை கிளையின் சார்பாக அதிரையின் முக்கிய பகுதிகளில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம், தெருமுனை பிராச்சரங்கள், கல்வி உதவித்தொகை, இரத்ததான உதவி, மருத்துவ உதவி ஆகியவற்றின் வரிசையில் வாழ்வாதார உதவியாக சி.எம்.பி லைனைச் சார்ந்த ஏழை சகோதரி ஒருவருக்கு தையல் இயந்திரமொன்று TNTJ யின் அதிரை கிளை நிர்வாகிகளால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டது.

சட்டப்பேரவைக் குழுவுக்கு பொது பிரச்னைகள், குறைகள் குறித்த மனு அனுப்ப அதிரையர்களுக்கு வாய்ப்பு !

தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழு [ 2013 - 14 ] தஞ்சாவூர் மாவட்டத்தில் விரைவில் கூடுவதென முடிவு செய்துள்ளது. இதையொட்டி, தஞ்சாவூர் எல்லைக்குள்பட்ட பகுதிகளிலுள்ள தனி நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்னைகள், குறைகள் குறித்த மனுக்களை [ 5 நகல்களாக தமிழில் ] மனுதாரர் தேதியுடன் கையொப்பமிட்டு

தலைவர்,
மனுக்கள் குழு,
தமிழ்நாடு சட்டப்பேரவை,
சென்னை - 9

என்ற முகவரிக்கு ஜூலை 12-க்குள் அனுப்ப வேண்டும்.

மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருக்க வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமலிருக்கும் பொதுப்பிரச்னைகள் குறித்ததாக இருக்கலாம். மனுக்கள் ஒரே ஒரு பிரச்னையை உள்ளடக்கியதாகவும், ஒரே ஒரு துறையை சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். மேலும், மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

ஆனால், மனுவிலுள்ள பொருள்கள் தனிநபர் குறை, நீதிமன்றத்தில் வழக்கில் உள்ள பொருள், வேலைவாய்ப்பு மற்றும் பட்டா வேண்டுதல், முதியோர் ஓய்வூதியம் வேண்டுதல், வங்கிக்கடன் அல்லது தொழில்கடன் வேண்டுதல், அரசுப் பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் போன்ற பொருள் கொண்டவையாக இருக்கக்கூடாது.

சட்டப்பேரவை விதிகளின் வரம்புக்குள்பட்ட மனுக்களை இந்த மாவட்டத்துக்கு மனுக்கள் குழு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும். அப்போது குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும். இதுகுறித்து மனுதாரருக்கு ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தகவல் தனியாக பின்னர் அனுப்பி வைக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் அவர்களின் செய்திகுறிப்பு தெரிவிக்கின்றது.

இந்த நல்லதொரு வாய்ப்பை அதிரையர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு தீர்வுகாண முயற்சிக்கலாம்.

அதிரையில் மனநல காப்பகம் / முதியோர் இல்லம் அவசியமா !?

அதிரை நகரில் சுற்றித்திரியும் மனநிலை பாதித்தோர் ஸாரி வயதுவந்த குழந்தைகள் என்றே இவர்களை அழைக்கவேண்டும். இவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களில் அதிகமானோர் தெருக்களின் முக்கிய வீதிகளில் உலா வருவதை கண்கூடாக்காணலாம்.

குடும்பச்சூழல், மன அழுத்தம், நோய் உள்ளிட்ட பலவித காரணங்களால் இவர்களுக்கு மனநிலை பாதிப்பு உண்டாகிறது என்றாலும் இவர்களை அரவணைத்து பணிவிடை செய்ய யாரும் முன்வருவதில்லை.

இவர்களில் சிலர் தங்களின் அன்றாட உணவுக்காக பலரிடம் கையேந்துவதையும் நிறுத்துவதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை  ஓரிருவர் மாத்திரமே இருந்த நமதூரில் இன்று அதன் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதுபோன்ற மனநிலை பாதித்தோரை [ மீண்டும் ஸாரி வயதுவந்த குழந்தைகளாகிய இவர்களை ] பராமரிக்க மனநலக் காப்பகம் நமதூரில் அமைக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான  மனிதநேய ஆர்வலர்களின் எண்ணமாக இருக்கின்றது.

அதே போல் முதியோர் அரவணைப்பு என்பதும் சமூகத்தில் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

1. பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி விளையாட வாய்ப்புகளற்று, பலவகை வேதனைகளைச் சுமந்து வாழ்வோரும்....

2. தான் தூக்கி வளர்த்த மகன்/மகள் ஆகியோரின் அன்பைப்பெறாமல் தவிக்கக் கூடியோரும்...

3. ‘பெரும் பாரமாக’ இருக்கிறார்களே என நினைத்து வீட்டை விட்டு அடித்து விரட்டப்பட்டோரும்...

4. மகன்/மகள் செய்த கொடுமைகளை கண்டு பொறுக்காமல் வீட்டிலிருந்து வேதனையுடன் வெளியேறியோரும்....

5. தேவையான மருத்துவ உதவி இல்லாமல் வீட்டின்/தெருவின் மூளை முடுக்குகளில் படுத்துறங்குபவர்களும்...

6. தேவையான நேரத்தில் உன்ன உணவு  கொடுக்காமல் பசிக் கொடுமையால்  அவதிப்படுபவர்களும்...

7. ஓய்வில்லாமல் வீட்டு வேலைகளைச் செய்ய சொல்லி தரும் நெருக்கடியால் மன வேதனைப்படுவோரும்...

8. சொத்துகளை அபகரித்துக்கொண்டு வீட்டை விட்டு துரத்தப்பட்டோரும்...

9. வீட்டைப் பாதுகாத்துக்கொள்ள காவலாளி என்ற உரிமையுடன் தங்க வைக்கப்பட்டுள்ளதை நினைத்து வேதனைப்படுவோரும்...

10. தனிமைபடுத்தப்பட்டு அருகில் உற்றார் - உறவினர் இல்லாமால் இறந்தோரும்...

நமதூரில் உண்டு !

வளர்ந்து வரும் நாகரீக உலகில் மனிதர்கள் பணம், பொருள் ஈட்ட புலம் பெயர்ந்து சென்றுவிடுகின்றனர். செல்லுமிடத்தில் சிலரது சூழ்நிலை மாறும் பட்சத்தில் அங்கேயே தங்கிவிடும சூழல் அமைந்து விடுகிறது. அப்படி அங்கேயே நீண்ட நாட்கள் தங்கிவிடும் சூழ்நிலையில் அவர்களின் பெற்றோறோர்களில் சிலர் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். குடும்ப உறவுகளும் கைவிட்ட நிலையில் இத்தகைய பெற்றோர்கள் நம் சமுதாயத்தில் கூடிக்கொண்டே போகிறார்கள். இது யாரும் அறிந்திராத ஆச்சரியமான கசப்பானதொரு உண்மை ! வசதி வாய்ப்புக்கள் இருந்தும் தள்ளாத வயதினில் கவனிக்க ஆளில்லாமல் கஷ்டப்படும் நிலையில் அவர்கள் அவதியுறும் நிலை உருவாகிறது. அப்பெற்றோர்கள் அரவணைப்புக்கு ஆளில்லாமல் மனதளவிலும் உடலளவிலும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

புலம்பெயர்வோர்களால் மட்டுமல்லாது பல்வேறு காரணங்களால் குடும்ப உறவுகளால் கைவிடப்பட்டவர்களில் சில முதியோர்களும் உண்டு. இப்படி ஆதரவற்ற முதியோர்களை ஆதரிக்க இல்லம் ஒன்று அவசியம் வேண்டும்.

ஆகவே வயோதியர்களை அரவணைக்க மருத்துவ வசதியோடு சகல வசதியும் அமையப்பெற்ற முதியோர் இல்லம் ஒன்று நமதூருக்கும் அவசியமானதாய் தோன்றுகிறது. நல்லெண்ணம் படைத்த நம் சமுதாய மக்கள் இவற்றை உருவாக்க முன்வரவேண்டும்.

அதிரை நியூஸ் குழு