.

Pages

Saturday, June 15, 2013

அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியின் கட்டுமானப் பணிக்கு உதவ அவசர வேண்டுகோள் !

அதிராம்பட்டிணத்தில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பிரச்சாரம் செய்து, இணைவைப்பு, பித்அத் போன்ற பெரும்பாவங்களில் இருந்து மக்களை மீட்டு எடுக்கும் பணியை செவ்வனே செய்ய உதவும், 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' என்ற ஏகத்துவ முழக்க பள்ளிவாசலின் கட்டிட பணி முழுமையடைய உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள்.

சத்திய பணியில் உங்களின் பங்களிப்பின் மூலம் நன்மையில் உங்களின் பங்கை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

இன்ஷா அல்லாஹ் பள்ளி கட்டுமான பணி வெகு விரைவாகவும் சிறப்பாகவும் நடந்து வருகிறது .வரும் ரமலான் மாதம் தொழுகை பள்ளிக்குள் கொண்டு சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறோம் .அனைவரும் அதற்காக துவா செய்வதுடன் தங்களால் இயன்ற அளவு பள்ளிக்கு வாரி வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம்

பள்ளி வேலை முழுமை பெற இன்னும் ஆக வேண்டிய செலவுகள்

மரவேலைகளுக்காக சுமார் 4 லட்சம்

எலெக்ட்ரிக் வேலைகளுக்காக சுமார் 2.25 லட்சம்

கல் வகையரா சுமார் 3.60 லட்சம் 

பெயின்ட் சுமார் 2 லட்சம்

இதர வேலைகளுக்கு சுமார் 3 லட்சம் 

மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளி பற்றிய விபரம்: http://www.adiraitntj.com/p/blog-page.html

நன்கொடை அனுப்ப http://www.adiraitntj.com/p/blog-page_29.html

நன்கொடை அனுப்ப மற்றும் மேலதிக விபரத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை நிர்வாகிகளை தொடர்பு கொள்ள அதிரை கிளை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தகவல் : TNTJ அதிரை கிளை



















3 comments:

  1. கந்தூரி, மௌலூது போன்றவைகளுக்கு செலவு செய்து காசையும் மறுமை வாழ்க்கையையும் வினாக்காமல் இதுபோன்ற இறை பணிக்கு செலவு செய்து மறுமையில் வெற்றி பெற அனைவரும் முயற்சிப்போம்

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. இறை இல்லம் ..

    கட்டிட வேலை பூர்த்தி அடைய

    வகுத்த வல்லோன் ..

    வல்லோன் வழி வகுப்பான் ..

    இன்ஸா அல்லாஹ்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.