இன்று [ 20-06-2013 ] அதிகாலை 3.50 மணியளவில் அதிரை பேரூராட்சி அருகே உள்ள ஜாஸ் பேக்கரி கடை அருகே வாகன விபத்து ஏற்பட்டது.
அதிரை பேரூராட்சி அலுவலகத்தின் அருகே சேது பெருவழிச் சாலையில் அமைந்துள்து ஜாஸ் பேக்கரி கடை. இந்த கடையின் சாலையோரத்தில் இடது பக்கமாக நின்றிருந்த வாகனத்தில் தூத்துக்குடியிலிருந்து எதிரே வந்த வாகனம் மோதியதில் இருவர் காயமடைந்தனர் மற்றவர்கள் லேசான காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். அதிகாலை ஏற்பட்ட விபத்தினால் இந்தப்பகுதி முழுவதும் பரப்பரப்பாகக் காணப்பட்டது.
எதிரே வந்த வாகனத்தின் ஓட்டுனர் அயர்ந்து தூங்கியதால் ஏற்பட்ட விபத்து என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇதுக்கெல்லாம் காரணம் தூக்கம் கிடையாது, மது ஒன்றே காரணம்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
செய்தி அறியத்தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteவாகன ஓட்டுனர்கள் பயணத்தின் போது தூங்கிவிடுவதன் காரணமாகவே அநேக கோரவிபத்துக்கள் நடக்கின்றன. இத்தகைய எத்தனயோ விபத்துக்கள் நடப்பது அறிந்தும் வாகன ஓட்டுனர்கள் இதனை சிந்திக்காது கவனக்குறைவாக இருப்பது தான் வேதனைக்குரிய விஷயமாக் இருக்கிறது.
அலட்சியப்போக்கு ஆபத்தில் தான் முடியும். விழிப்புடன் செயல்பட்டால் விபத்தினை தடுக்கலாம்.
முதலில் இரண்டு வாகனங்களையும் ஒட்டி வந்தவர்களின் வாயை ஊதச்சொல்லிப் பாருங்கள். எழுபது சதவீதத்துக்கு மேற்பட்ட சாலை விபத்துக்கள் குடியால்தான் ஏற்படுகின்றனவாம் . மேலும் எல்லா ஊர்களிலும் எல்லா திசைகளிலும் எல்லா நுழை வாயில்களிலும் நீக்கமற நிறைந்து இருப்பது- வரவேற்பது- மதுக்கடைகளே. நமதூரும் விதிவிலக்கல்ல.
ReplyDeleteஇப்ராஹிம் அன்சாரி கூறுபவை முற்றலும் உண்மை
ReplyDeleteஇந்த விபதுக்கெள்ளாம் காரணம் அரசுதான்
நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டாலே
விபத்துக்கள் தானாக குறைந்துவிடும்
கேவலம் சாராயத்தை ஊத்திக்கொடுத்து ஒரு அரசு அதில் குளிர் காயுது என்றால் அந்த ஆட்சி தேவையா?
குர்ஆனின் ஆட்சி வந்தால்தான் இந்த நிலை மாறும்
மக்களிடம் மனமாற்றம் தேவை