கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிக மின்சார சப்ளைக் காரணமாக நீர் மூழ்கி மோட்டார் பம்ப்கள் பழுதடைந்து விட்டதால் அதிரையின் முக்கியப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிப்பதில் தடங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிரை மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இதுகுறித்து பேரூராட்சி தொடர்புடைய அலுவலரிடம் விசாரித்த வகையில்... 'துரிதமாக வேலைகள் நடந்து வருவதாகவும், விரைவில் பழுதுகள் சரி செய்யப்பட்டு சீராக குடிநீர் வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும்' எனத் தெரிவித்தார்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇறைவன் கொடுத்துள்ள பரக்கத்துகளில் தண்ணீரும் ஒன்று.
எங்கள் வீட்டில் குடிநீரைத்தவிர்த்து மற்ற தேவைகளுக்கு ஆழ்குழாய் மூலம் கிணறு நீரைப் பெற்று வருகின்றோம்.
குடிப்பதற்கு பேரூர்ராட்சி மூலம் விநியோகம் செய்யும் நீரை நம்பி இருக்கின்றோம், மேலும் எங்கள் வீட்டில் குடிநீரை உறிஞ்சி இழுப்பதற்கு எந்த மோட்டாரும் கிடையாது, ஜஸ்ட் டாப்பை திரந்து ஐந்து குடங்களில் நீரை சேகரித்துவிட்டு மூடிவிடுவோம்.
தற்போது மின் பற்றாக்குறை காரணமாக ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வந்தது, இப்போது பல நாட்களாக தண்ணீர் சரியாக வருவது கிடையாது.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
மிக .முக்கியமான ஒன்று தண்ணீர் விரைவில் தயார் செய்தால் நன்று .
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎந்த ஒரு பொருளும் சரி, சாதனங்களும் சரி பழுதடைவது சகஜம், அதற்க்கு மாற்று ஏற்பாடு செய்து தருவது நிர்வாகத்தின் பொறுப்பு, மாற்று ஏற்பாடு என்றால் பழுதடைந்த சாதனம் சரியாகும்வரை தண்ணீர் தடையில்லாமல் கிடைப்பதற்கு மாற்று சாதனங்களை பொருத்தி பொதுமக்களை சந்தோஷப்படுத்துவது நிர்வாகத்தின் பொறுப்பு.
ReplyDeleteஒரு சமயம் பழுதடைந்த சாதனம் சரியாகுவதர்க்கு ஒருமாத காலம் ஆகும் என்றால் அது வரைக்கும் தண்ணீர் கிடைக்காதா? முடிவுதான் என்ன.
பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
எத்தனையோ பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் பேரூராட்சித்தலைவர் இந்த தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு செய்தால் ரொம்பப்புண்ணியமாக இருக்கும். ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் எடுக்க வசதி இல்லாத ஏழை நடுத்தர மக்கள் கதி என்னவாகும் என்பதினை சற்று சிந்திப்பீர்களாக.!
ReplyDelete