.

Pages

Sunday, June 9, 2013

அதிரையில் நடைபெற்ற மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி !

அதிரை மேலத்தெருவில் கடந்த [  06-06-2013 ] அன்று மாலை 4.30 மணியளவில் மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


பள்ளி நிர்வாகி முஹம்மது இப்ராஹீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தக்வா பள்ளியின் இமாம் தமீம் அன்சாரி ஆலிம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மவ்லவி முஹம்மது முஸ்தபா சிராஜ் அவர்கள் பெண்களுக்காக சிறப்பு பயான் நிகழ்த்தினார்.

முன்னதாக சிறுவர் சிறுமிகளுக்கான மார்க்க அறிவுத்திறன் போட்டிகள் நடைபெற்றன. இதில் பெரும்பாலான சிறுவர் சிறுமிகளோடு பெண்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

15 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்

    விடாப்பிடியாக இது போன்ற நிகழ்வுகளை நடத்தினாலும் பெரியவர்கள் யாரும் வரவில்லை என்று மகிழ்ந்தாலும்
    இத்தனை சிறு பிள்ளைகள் இந்நிகழ்வுக்கு வந்து இருப்பதை பார்க்கும் போது தவ்ஹீத் பணி நமது ஊரில் இன்னும் முடுக்கி விடப்பட வேண்டும் என்பதை தெரிய படுத்துகிறது

    ReplyDelete
  3. பெண்கள் கூட்டத்தை படம்பிடித்து போடவில்லை. அதனை போட்டிருந்தால் // இந்நிகழ்வுக்கு வந்து இருப்பதை பார்க்கும் போது தவ்ஹீத் பணி நமது ஊரில் இன்னும் முடுக்கி விடப்பட வேண்டும் என்பதை தெரிய படுத்துகிறது// என்று விளக்கங்கள் எடுத்துக்கொள்வார்கள்.
    அடுத்தது ஹாரன் கட்டி பயான் செய்ததை எழுதியிருந்தால் இனி ஹாரன் கொடுப்பதை தடுக்க திட்டமிட்டிருப்பார்கள். இதுபோன்ற வேலைகள்தான் அவர்கள் செய்கிறார்கள். இது தான் அவர்களின் நல்ல வழிகாட்டல்கள்.

    தமிழக மக்கள் நன்கு இதனை புரிந்துகொள்ளவும்.

    ReplyDelete
    Replies
    1. பெண்கள் யாரும் வரவில்லை என்பதே உண்மை

      Delete
    2. பெயரே தன்னைப்பற்றி விளக்கம் தருகிறது. அதன்படிதான் எல்லாம் இருக்கும்.

      Delete
  4. மிஃராஜ் விளக்கங்கள் முஸ்லிம்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்பதில் எவ்வளவு முயற்ச்சிகள் செய்கிறார்கள்.

    தமிழக முஸ்லிம் மக்கள் நன்கு இதனை புரிந்துகொள்ளவும்.

    ReplyDelete
    Replies
    1. இவர்கள் பர்லானவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதே உண்மை

      Delete
    2. உயிரின் மேலான கண்மணி நாயகம்(ஸல்) அன்னவர்களை பற்றியும்,அனாவர்களின் வாழ்வில் நடந்தவைகளைப் பற்றியும் தெரியாதவரைக்கும் இஸ்லாம் புரியாது.

      அவைகளை புரிவதுதானே முதல் பர்ல்.

      Delete
  5. ஆரம்பத்தில் நடுநிலையாக செயல்பட்ட அதிரை நியூஸ் இணையதளம் நாட்கள் செல்ல செல்ல அதிரையில் மற்ற ஒரு சார்பு இணைய தளங்களுக்கு தாங்கள் சலைத்தவர்கள் அல்ல என்பதை நிருபித்துள்ளார்கள்

    மார்க்கத்தில் இல்லாத நபிகள் காட்டித்தராத செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மார்க்கத்தில் அனுமதியளித்த நன்மையாக காரியங்களை தன் இனைய தளத்தில் போடாமல் ஓரம்கட்டுவது சமிபகாலமாக பார்க்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. தி அதிரை நியுஸ் இணையதளம் ஒன்றுதான் நடுநிலை செய்தி இணையதளம் என்பதை எல்லோரும் கண்கூடாக பார்க்கிறோம்.

      நண்பர் எழுதியபிரகாரம் // மற்ற ஒரு சார்பு இணைய தளங்களுக்கு // என்று மற்ற இணையதளங்களை ஒரு சார்பு இணையதளம் என்று பிரகடனப்படுத்திவிட்டார். புரிந்தால் சரிதான்.

      இதுகால் வரைக்கும் ஒத்த கருத்துடையவர்கள் வஹ்ஹாபிகளின் கருத்து மட்டும் இணைய தளங்களில் விளையாடின. அவர்கள் வஹ்ஹாபிகள் என்பதை மக்கள் புரிவது அவர்களுக்கு தர்மசங்கடமாக இருக்கலாம்.

      அவர்கள் கடிவாளமிட்டு இதுதான் மார்க்கம் என்று தவறி போய்விட்டதை கருத்து பரிமாற்றத்தில் விளங்குவோர் விளங்கிக்கொள்ள காரணமான இவ்யினையதலத்தை குறை கூறுவது நடுநிலை,நியாய மனமில்லை என்பதைத்தானே காட்டுகிறது!

      புரிகிறவர்கள் புரிந்தால் சரிதான். என்றைக்குமே இப்படியாகவா இருக்கப்போகிறார்கள்? இடையில் வந்த மாற்றம் விரைவில் இல்லாமல் போகாத?

      நாடறிந்த நல்ல பேச்சாளர் மார்க்கம் தெளிந்த மவ்லவி ஹாமிது பக்கிரி குழப்ப வஹ்ஹாபி மார்க்கத்தைவிட்டு சரியான வழி சுன்னத் ஜமாஅத் மார்க்கத்துக்கு வந்தது தமிழகம் அறியாததா?

      எல்லார் மனமும் நியாயத்தை தனிமையில் தன்னிடம் பேசாமலா போகும்! பேசும்.

      Delete
  6. தன் பெயரைக்கூட வெளியிட முடியாத பல பெயர்களில் ஒழிந்துக்கொண்டு நச்சுக்கருத்துக்களை வெளியிடும் இவரைப்போன்றவர்களுக்காக ஜாகிர்உசேன் போன்றவர்கள் தன் பொன்னான நேரத்தை வினாக்கவேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. // ஜாகிர்உசேன் போன்றவர்கள் தன் பொன்னான நேரத்தை வினாக்கவேண்டாம்// வீனகத்தானே போய்க்கொடிருக்கிறது!

      புனைப்பெயர் வழக்கில் உள்ள ஒன்றுதான் நண்பரே!

      'சொல்வது யார் என்பது வேண்டாம் சொல்வதை கவனி' என்ற வழிகாட்டல் உள்ளது அன்பரே!

      Delete
  7. நச்சுக்கள் எதுவென்று பரந்த மனதில் சிந்தித்தால் யாருக்கும் புரியாமலா போய்விடும்.

    புரிந்துகொண்டால்... நலமே.

    மனமாற்றங்கள் ஏற்படுவது காலச் சுழ்நிலையில். அமைதியை மையமாகக் கொண்டு சிந்தித்தால் சரியான தெளிவுகள் தெரியாமலா போய்விடும்!

    இவ்வாறு சிந்தித்தவர்கள் சிறப்பை எய்துவார் என்பது திண்ணமே.

    நன்றி!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.