.

Pages

Tuesday, June 4, 2013

பெண்கள் பள்ளிகளில் இனி ஆண் ஆசிரியர்கள் இல்லை, தமிழக அரசு அதிரடி.

சென்னை:

தமிழக அரசு இன்று எடுத்துள்ள அதிரடி அரசாணை முடிவுப்படி இனி மாணவிகள் மட்டுமே பயிலும் பெண்கள் பாடசாலைகளில் ஆசிரியர்களாக பெண்கள்  மட்டுமே நியமிக்கப்படுவர் என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்தக் கல்வியாண்டு முதலே இந்த அரசாணை நடைமுறைக்கு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசின்  அரசாணையில் (G.ஓ), பெண்கள் பள்ளிகளில் பணி நியமனம் மற்றும் காலி பணியிடங்களை நிரப்புவதில் அரசு பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளையே நியமிக்க வேண்டும், தலைமை ஆசிரியைகளும் பெண்களாகவே இருக்க வேண்டும் என்றும் அதுபோலவே, ஆண்கள் பள்ளிகளில் ஆண்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர் என்றும் இருபாலர் பள்ளிகள் எனில் இரு பாலரும் நியமிக்கப்படலாம், ஆயினும் பெண்களுக்கே அங்கும் முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக செய்திகள் வருவதையடுத்தே அரசு இந்த ஆணையை பிறப்பித்துள்ளதாகத் தெரிகிறது. அரசின் இந்த ஆணைப் பெற்றோர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

நன்றி:- இந்நேரம்.காம்



7 comments:

  1. அதிரை நியுசுக்கு உலக முழுவுதும் வாசகர்கள் உள்ளனர் .சுடசுட , நடுநிலையுடன் ,பாரபட்சமில்லாமல் ,அதிரையில் மட்டுமல்ல அதன் சுற்று வட்டார பஹுதி நியுசுகளையும் உடனுக்கனுடன் கலர்புல்லாக தருவதில் என்றைக்குமே நம்பர் 1 தான்.தொடரட்டும் அதிரை நியுசின் சேவை மலரட்டும் அதிரையில் புத்துணர்ச்சி .சகோதரர் அதிரை சண்முகம் அவர்களின்(அனைத்து மதத்தினருக்கும் நடுநிலையான ஊடகம்மென நிருபித்திஉள்ளீர்) இந்த பாராட்டுரை அதிரை நியுசின் நடுநிலையை நிருபித்துள்ளது அதுமட்டுமல்ல ஏழை பணக்காரர் சாதி மதம் என்று வித்தியாசம் பாராமல் அணைத்து மரண செய்திகளையும் உடனுக்குடன் வெளியிட்டு வளைகுடா நாடுகளிலும் ஐரோப்பா நாடுகளிலும் உள்ள நமது அதிரை மக்கள் அந்த செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள உதவும் அதிரை நியுசின் பனி மகாத்தானது,உதாரணம் அமரர் சாத்தையன்,திரு ராஜேந்திரன்,திரு பாலு , ஜனாப் சேகாதி. ஜனாபா வாடா சவியாம்மா போன்றோரின் மரண செய்திகள் .மற்றும் சமுக நல பணிகள் ரெட்க்ராசின் ரத்த தான முகாம் ,கல்வியில் முதலிடம் பெற்ற மாணவிகளை ஊக்கபடுதுதல் .விளையாட்டு .எம் எல்.ஏ. வின பேட்டிஎன்று அரசியல் சமூகம் விளையாட்டு கல்வி என்று அணைத்து துறைகளிலும் கலந்து செய்திகளை வெளியிடுவதில் என்றுமே அதிரை நியுஸ் நம்பர் 1 தான் தொடருட்டும் அதிரை நியுசின் அணைத்து பணிகளும் என்று வாழ்த்தும் ஐரோப்பா வாழ் அதிரை மைந்தன்

    ReplyDelete
  2. சபாஷ் சரியான முடிவு !

    ஆனால் சமூக குற்றங்கள் குறையுமா !? பொறுத்து இருந்து பார்ப்போம் :)

    ReplyDelete
  3. இந்த முடிவை எப்பொழுதே எடுத்திருக்க வேண்டும். காலதாமதமானாலும் காலசூழலுக்கு ஏற்ற நல்ல முடிவு.

    ReplyDelete
  4. நல்ல முயற்சி இது போன்று தீர்வுகள் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்று நம்பக்கூடும்.

    ReplyDelete
  5. இந்த முடிவை எப்பொழுதே எடுத்திருக்க வேண்டும். காலதாமதமானாலும் காலசூழலுக்கு ஏற்ற நல்ல முடிவு

    ReplyDelete
  6. வரவேற்க வேண்டிய ஒன்று

    ReplyDelete
  7. நல்ல முயற்சி

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.