.

Pages

Sunday, June 16, 2013

அதிரையில் காங்கிரஸ் செயல்வீரர் கூட்டம் ! பல்வேறு அரசியல் கட்சியிலிருந்து விலகிய தொண்டர்கள் காங்கிரசில் இணைந்தனர் !

நேற்று [ 15-06-2013 ] நடைபெற்ற  காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியிலிருந்து தொண்டர்கள் விலகி காங்கிரஸில் இணைந்தனர்.

காங்கிரஸ் நகரத்தலைவர் MMS அப்துல் கரீம் அவர்களின் தலைமையில்  காங்கிரஸ் செயல் வீரர் கூட்டம் நேற்று மாலை 6 மணியளவில் கட்சியின் அலுவலத்தில் நடைபெற்றன. இதில் பல்வேறு அரசியல் கட்சியிலிருந்து தொண்டர்கள் விலகி காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

காங்கிரஸில் இணைந்தவர்கள் விவரம் :

1. முத்து குமரன் த/பெ. வெற்றிவேல்
பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்

2. காளிமுத்து த/பெ. சோமு.
அதிமுக விலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்

3. பிச்சை
திமுக விலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.

மேலும் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தஞ்சை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க மேலிடத்தைக் கேட்டுக்கொள்வது என்றும், வருகின்ற மழைக்காலங்களில் அதிரை பேரூராட்சிப் பகுதிகளில் கழிவு நீர் தேங்குவதால் ஏற்படும் சுகாதாரக்கேடுகளை தடுக்கும் நோக்கில் பேரூராட்சியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள கேட்டுக்கொள்தல் உள்ளீட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னோடிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.







நன்றி : அதிரை மைதீன்

5 comments:

  1. நகர காங்கிரஸ் தலைவர் ஜனாப் எம்.எம்.எஸ். அப்துல் கரீம் அவர்களின் மகத்தான பணியால் அதிரை நகர காங்கிரஸ் மென்மேலும் புத்துணர்வு பெற வாழ்த்துகிறேன்

    இளைஞர் காங்கிரஸ் தலைவர் மைதீன் பணியும் குறைவில்லை . மைதீனின் பனி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  2. Very Good Job, In Adirai. This Is jabreen Usa.

    ReplyDelete
  3. Very Good Job, In Adirai. This Is jabreen Usa.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    நகர காங்கிரஸ் தலைவர் ஜனாப் எம்.எம்.எஸ்.அப்துல் கரீம் காக்கா அவைகளின் தலைமையில் காங்கிரஸில் இணைந்து இருக்கும் தொண்டர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தலைவர் அவர்களின் மகத்தான பணி மென்மேலும் வளர பாராட்டுக்கள்.

    இளைஞர் காங்கிரஸ் தலைவர் தம்பி மைதீன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  5. தலைவர் அவர்களின் மகத்தான பணி மென்மேலும் வளர பாராட்டுக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.