.

Pages

Friday, June 14, 2013

செட்டியா குளம் ஆக்கிரமிப்பு தொடர்பாக நில அளவை அலுவலர்கள் நேரில் ஆய்வு !

அதிரை பேரூராட்சியின் சார்பாக 2012-2013 ஆம் ஆண்டுக்கான நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் நடுத்தெருவில் உள்ள செட்டியா குளம் – தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூபாய் 50 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு, இந்த பணிகளுக்கான ஒப்பந்தமும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறுதி செய்யப்பட்டன.

இந்தப் பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாக கடந்த [ 10-04-2013 ] அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து உதவி செயற்பொறியாளர்கள் வருகை தந்து பார்வையிட்டனர். அப்போது அப்பகுதியைச் சுற்றி ஆக்கிரமணம் செய்து இருப்பது உறுதி செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் அன்றைய தினமே சம்பந்தப்பட்ட பகுதிகளை முறையாக நில அளவீடு செய்வது என முடிவுசெய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து இன்று [ 14-06-2013 ] காலை நில அளவை துறை அலுவலர்கள் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. அதிரை கிராம நிர்வாக அலுவலர், தலையாரி ஆகியரோடு அதிரை பேரூராட்சியின் செயல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் உடனிருந்து உதவினர்.

இனி செட்டியாக்குளத்தின் மற்ற பணிகள் அனைத்தும் மும்முரமாக செயல்படுத்தப்பட்டு விரைவாக முடிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றன.







2 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. தகவலுக்கும் நன்றி.

    நல்லது நடந்தால் சரிதான்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.