.

Pages

Tuesday, June 18, 2013

அதிரையின் பிரதான சாலையை சீரமைக்க வேண்டி வர்த்தக சங்கம் சார்பில் கோரிக்கை மனு !

அதிரை பேரூந்து நிலையத்திலிருந்து பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு, கடைத்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு வழியாக செல்லும் மகிழங்கோட்டை சாலையை மறு சீரமைத்து தருதல் தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி அதிரை வர்த்தக சங்கம் சார்பில் அதிரை பேரூராட்சித் தலைவர் அஸ்லம் அவர்களின் முன்னிலையில் சம்பந்தப்பட்ட பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மலைஅய்யன் அவர்களிடம், வர்த்தக சங்க செயலாளர் முஹம்மது யூசுப் அவர்களால் இன்று [ 18-06-2013 ] காலை 11 மணியளவில் கோரிக்கை அடங்கிய மனு கொடுக்கப்பட்டது.



3 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.
    சந்தோஷமான செய்தி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. வணக்கம் மாண்புமிகு முதல்அமைச்சர் அவர்கள் எங்கள் ஊரில் உள்ள கிராமசாலைகள் அனைத்தும் மிகவும் பழுதாக உள்ளது அதை புதுப்பிக்க வேண்டுதல் சம்பந்தமாக 153 அதிராம்பட்டினம் மெயின் ரோட்டில் இருந்து மகிழன்கோட்டை வரை செல்லும் தார் சாலை மிகவும் மோசமாக உள்ளது இந்த சாலை எங்கள் ஊரில் மிகவும் பயனுள்ளதாக உள்ளவையாகும் ஏனெனில் இந்த சாலையில் தான் மருத்துவமனை மற்றும் கடைதெரு வங்கிகள் மற்றும் பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலை ஆகும் . இந்த சாலையை புதுப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம் இப்படிக்கு அ.அப்துர் ரஹ்மான்

    எனக்கு முதலமைச்சரின் தனி பிரிவு செயலாளர் அவர்களிடம் வந்த பதில்

    அதிராம்பட்டினம் - தொக்காலிக்காடு சாலை (வழி மகிழங்கோட்டை) கி.மீ.0/0-5/400 இதில் அதிராம்பட்டினத்திலிருந்து மகிழங்கோட்டை வரை கி.மீ.2.800 மிகவும் மோசமாக உள்ளது. பழுதுநீக்கம் செய்ய உத்தேசமாக ரூ.60.00 லட்சம் செலவாகும். 2013-14 ஆம் ஆண்டில் அரசு திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் எடுத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விபரம் மனுதாருக்கு தெரிவிக்கப்படுகிறது.மனு ஏற்கப்பட்டது. ந.க.எண்.2459/2012/அ5 நாள் 18.02.2013

    ReplyDelete
    Replies
    1. அன்புச்சகோதரர் அபூபஹத்னான் அவர்களின் நல்ல முயற்சி !

      உங்களின் முயற்சி வெற்றிபெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.