.

Pages

Tuesday, October 1, 2013

ஆஸ்திரேலியாவில் கவிக்கோ அப்துல் ரஹ்மானுடன் அதிரையர்கள் சந்திப்பு !

சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற கவிகோ அப்துல் ரஹ்மான் அவர்களை அங்கு அதிரையர்கள் இல்லத்தில் தங்க வைத்து உபசரிக்கப்பட்டார்.

பின்பு சிட்னி, மற்றும் மெல்போர்ன் நகரங்களுக்கு விஜயம் செய்து இஸ்லாத்தில் ஒற்றுமையின் அவசியத்தைப் பற்றி பல்வேறு கூட்டங்களில் பேசிய அவர்கள், தமிழ் நாட்டில் முஸ்லிம்களுக்காக ஒரு மருத்துவக் கல்லூரி துவங்குவதற்காக அவர்கள் வக்ப் வாரிய தலைவராக இருந்தபோது எடுத்த முயற்சிகளைப் பற்றியும், அது பல்வேறு காரணங்களினால் இயலாமல் போனதைப் பற்றியும், அந்த முயற்சியை மறுபடியும் துவங்கி இருப்பதைப் பற்றியும் எடுத்துக்கூறினார்கள்.

இந்த மருத்துவ கல்லூரி, சமுதாய சிந்தனையில் எந்த வித லாப நோக்கமும் இல்லாமல் தொடங்கப்பட இருக்கிறது. இதை துவங்க அவர்களுக்கு 50 ஏக்கர் நிலத்தை இலவசமாக  அளிக்க திருநெல்வேலியை சார்ந்த ஒரு சகோதரர் முன் வந்துள்ளார். இதைப்பற்றிய கவிக்கோவின் நேர்முக வர்ணனையை காண கீழ்க்கண்ட  You Tube Link ஐ சொடுக்கவும். 
இதில் நாமும் பங்கெடுத்துக்கொண்டு ஆரம்பத்தில் இருந்தே ஒரு ஈடுபாட்டுடன் செயல்பட்டால், இன்ஷா அல்லாஹ், நமதூருக்கு உள்ள டாக்டர்கள் பற்றாக்குறை நமது வம்சங்களுக்கு நீங்கும்.  

இன்ஷா அல்லாஹ், கவிக்கோ அவர்களை நமதூருக்கு வரவழைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மேலும் இதைப்பற்றி ஏதேனும் விபரங்கள் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி மற்றும் மின் அஞ்சல் முகவரி .

email: msahib@gmail.com 
Phone: +61 433 077 660

தகவல் : மீரா சாஹிப்
ஆஸ்திரேலியா

7 comments:

  1. இன்ஷா அல்லாஹ் விரைவில் வரட்டும் நமது சமுதாயதிற்க்கு மருத்துவக் கல்லூரி அல்லாஹு துணை புரிவான்.நாமும் முயற்சி செய்வோம்.

    ReplyDelete
  2. இக்ளாசோடு செய்யும் பணிகள் சிறக்க எனது துஆவும்

    ReplyDelete
  3. இன்ஷா அல்லாஹ் விரைவில் வரட்டும் நமது சமுதாயதிற்க்கு மருத்துவக் கல்லூரி அல்லாஹு துணை புரிவான்.நாமும் முயற்சி செய்வோம்

    ReplyDelete
  4. Machchan eshak mohamed shaleh mama jainulabuthen mama sarafuthenkakka anaivaraiyum onraha athivum kavekko annan kuda parppathu santhosamaha ullathu. Matra potdo veparam anakku pureyathalal anaivarukkum assalamu alaikkum

    ReplyDelete
  5. Uglameen annappade Allah kallure amaiya uthave seaivan aamen

    ReplyDelete
  6. நமது சமுதாயதிற்க்கு மருத்துவக் கல்லூரி அல்லாஹு துணை புரிவான்.நாமும் முயற்சி செய்வோம்

    ReplyDelete
  7. விரைவில் வரட்டும் இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.