.

Pages

Monday, October 14, 2013

தீ விபத்து பகுதிகளை பார்வையிட்டு உதவிகள் வழங்கினார் அமைச்சர் வைத்திலிங்கம் !

அதிரை தக்வா பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான மார்கெட் பகுதியில் கடந்த [ 03-10-2013 ] அன்று இரவு 10.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் உணவகங்கள், பலசரக்குக் கடைகள், தொப்பிக்கடை, சலூன் கடைகள், கோழிக்கடை உள்ளிட்ட ஏராளமான கடைகள்  முற்றிலும் எரிந்து சாம்பலாகின. கடைகளில் இருந்த பொருட்கள் பெரும்பாலும் தீயில் எரிந்து நாசமாகின.

பாதிப்படைந்த பகுதிகளை இன்று பகல் 12 மணியளவில் மாநில அமைச்சர் வைத்திலிங்கம் அவர்கள் பார்வையிட்டார். மேலும் பாதிப்படைந்த கடைகளின் உரிமையாளர்களை சந்திந்து தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் நிதி உதவியாக தலா ஐந்தாயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ஐம்பதாயிரத்தை பத்து நபர்களுக்கு வழங்கினார். பெற்றுச்சென்ற அனைவரும் தங்களின் நன்றியை அமைச்சருக்கு அன்புடன் தெரிவித்துக்கொண்டனர்.

விபத்து பகுதிகளை அமைச்சர் பார்வையிடும் போது அதிரை நகர அஇஅதிமுக நகர செயலாளர் பிச்சை, நகர துணைச்செயலாளர் முஹம்மது தமீம், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணைத்தலைவர் M.B. அபூபக்கர், அஜீஸ், தமிமுல் அன்சாரி, ஹாஜா பகுருதீன் உள்ளிட்ட ஏனைய அதிமுக நகர நிர்வாகிகள் அனைவரும் உடனிருந்தனர்.

மேலும் தக்வா பள்ளி டிரஸ்ட் நிர்வாக உறுப்பினர்கள் M.B. அபூபக்கர், தமிமுல் அன்சாரி, ஹாஜா பகுருதீன்  ஆகியோர் தீ விபத்து குறித்து அமைச்சரிடம் விவரித்து கூறினர்.













2 comments:

  1. விபத்து நடந்து உடனே வந்திருந்தால் அனுதாபம் தெரிவிக்க வந்தார் என்று சொல்லலாம், அதிரை புதியவன் சொல்வதுபோல வந்தது அதுக்குத்தான், என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

    இன்னொரு விஷயம், மந்திரி அறிவிப்பு இல்லாமல் வந்திருப்பது, பேரூராட்சி தலைவர் மீது பொய் வழக்கு போட்டதற்கு, DMK தரப்பில், மறியல், ஆர்பாட்டம் என்று நடந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவா? என்னமா இருந்தாலும் இப்படி ஒரு வழக்கு நம்மவர்கள் போட்டிருப்பதி எந்தவகையில் நியாயம்.?

    ReplyDelete
  2. அதிரையை பொருத்தவரை என்ன பணம் கொடுத்தாலும், DMK ஓட்டுக்களை யாராலும் பிரிக்க முடியாது, பார்த்தீர்களா அவர்கள் நடத்திய பட்டி மன்ற கூட்டத்தை?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.