பாதிப்படைந்த பகுதிகளை இன்று பகல் 12 மணியளவில் மாநில அமைச்சர் வைத்திலிங்கம் அவர்கள் பார்வையிட்டார். மேலும் பாதிப்படைந்த கடைகளின் உரிமையாளர்களை சந்திந்து தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் நிதி உதவியாக தலா ஐந்தாயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ஐம்பதாயிரத்தை பத்து நபர்களுக்கு வழங்கினார். பெற்றுச்சென்ற அனைவரும் தங்களின் நன்றியை அமைச்சருக்கு அன்புடன் தெரிவித்துக்கொண்டனர்.
விபத்து பகுதிகளை அமைச்சர் பார்வையிடும் போது அதிரை நகர அஇஅதிமுக நகர செயலாளர் பிச்சை, நகர துணைச்செயலாளர் முஹம்மது தமீம், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணைத்தலைவர் M.B. அபூபக்கர், அஜீஸ், தமிமுல் அன்சாரி, ஹாஜா பகுருதீன் உள்ளிட்ட ஏனைய அதிமுக நகர நிர்வாகிகள் அனைவரும் உடனிருந்தனர்.
மேலும் தக்வா பள்ளி டிரஸ்ட் நிர்வாக உறுப்பினர்கள் M.B. அபூபக்கர், தமிமுல் அன்சாரி, ஹாஜா பகுருதீன் ஆகியோர் தீ விபத்து குறித்து அமைச்சரிடம் விவரித்து கூறினர்.
விபத்து நடந்து உடனே வந்திருந்தால் அனுதாபம் தெரிவிக்க வந்தார் என்று சொல்லலாம், அதிரை புதியவன் சொல்வதுபோல வந்தது அதுக்குத்தான், என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
ReplyDeleteஇன்னொரு விஷயம், மந்திரி அறிவிப்பு இல்லாமல் வந்திருப்பது, பேரூராட்சி தலைவர் மீது பொய் வழக்கு போட்டதற்கு, DMK தரப்பில், மறியல், ஆர்பாட்டம் என்று நடந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவா? என்னமா இருந்தாலும் இப்படி ஒரு வழக்கு நம்மவர்கள் போட்டிருப்பதி எந்தவகையில் நியாயம்.?
அதிரையை பொருத்தவரை என்ன பணம் கொடுத்தாலும், DMK ஓட்டுக்களை யாராலும் பிரிக்க முடியாது, பார்த்தீர்களா அவர்கள் நடத்திய பட்டி மன்ற கூட்டத்தை?
ReplyDelete