.

Pages

Wednesday, October 2, 2013

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு ! உங்களுக்கு இடமுண்டா !?

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து 31-ம் தேதி வரை வாக்காளர் சுருக்கமுறை திருத்தப் பட்டியல் முகாம் நடைபெறவுள்ளது.  இதில் பதிவுசெய்ய 31.12.1995-க்கு முன்பு பிறந்தவர்களாகவும், 1.1.2014 அன்று 18 வயது நிரம்பியவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதால், தற்போது சேர்க்கப்பட உள்ள வாக்காளர்களையும் பட்டியலில் சேர்த்து, ஜனவரி முதல் வாரத்தில் இறுதி பட்டியல் வெளியிடப்படவுள்ளது.  மேலும், தேசிய வாக்காளர் தினமான ஜன. 25-ம் தேதி வாக்காளர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட உள்ளது.

அதன்படி, வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பியவர்கள் இடம்பெற வேண்டும். பொதுமக்கள் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை நிர்ணயிக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் தொடர்பு கொண்டு அறியலாம். மேலும், இந்தப் பட்டியல்களை  www.election.tn.gov.in என்ற வலைத்தளத்திலும் காணலாம்.

தவிர, 18 முதல் 19 வயது நிரம்பியுள்ள மற்றும் விடுபட்ட நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காகச் சிறப்பு சுருக்க முறை திருத்தத்தை நடத்துமாறு இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி, மாவட்டத்தில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செவ்வாய்க்கிழமை (அக். 1) முதல் அக். 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும், இக்காலகட்டத்தில் அக். 6, 20, 27 ஆகிய விடுமுறை நாள்களிலும் சிறப்பு சுருக்க முறை முகாம்கள் நடைபெறவுள்ளன.

6 comments:

  1. நமது உரிமையை நிலை நாட்டிக்கொள்ள பொதுமக்கள் அவசியம் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

    குறிப்பாக அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தன்னார்வு தொண்டு நிறுவனங்கள், ஜமாத்தினர், பஞ்சாயத்தினர் ஆகியோர் மக்களுக்கு உதவு முன்வர வேண்டும்.

    ReplyDelete
  2. Anaiththu mathaththenarum entha adirai news seaitheyai parththu padeththu muyarche panna valththu kenrean .i.u.m.l adirai

    ReplyDelete
  3. வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை நிர்ணயிக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் தொடர்பு கொண்டு அறியலாம். மேலும், இந்தப் பட்டியல்களை http://www.elections.tn.gov.in/ என்ற வலைத்தளத்திலும் காணலாம்.

    ReplyDelete
  4. அருமையான வாய்ப்பு 18 வயது நிரம்பியவர்கள் பயன் படுதிக்கொள்ளவும்.

    ReplyDelete
  5. நம் உரிமையை விட்டுக்கொடுக்கலாகது. 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமன்றி பெயர் விடுபட்டுப்போனவர்களுக்கும் அறிந்தவர்கள் அறிவுறித்தி வாக்குரிமை பெற முயற்சி செய்வோம்.

    ReplyDelete
  6. " உங்க டூத்பேஸ்ட் " - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!
    " உங்க டூத்பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இருக்கா..? " -னு
    சூர்யா கேட்டாரேன்னு அந்த பேஸ்ட் வாங்கி
    யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்...

    அப்புறம்
    " உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா..? " -னு
    அனுஷ்கா கேட்டாங்க... அதனால அதையும்
    வாங்கினேன்..

    ( ஹி., ஹி., அனுஷ்கா பீல் பண்ணினா எனக்கு மனசு தாங்காதுல்ல... )

    சரி மேட்டர்க்கு வருவோம்...

    கம்பெனிக்காரன் குடுத்த காசை வாங்கிட்டு அது இருக்கா..? இது இருக்கான்னு கேட்டாங்களே தவிர... அதுல நிக்கோடின் இருக்குன்னு யாருமே சொல்லலை...

    என்னாது நிக்கோடினா..?!!

    ( அடப்பாவிகளா.. நிம்மதியா பல்லு வெளக்க
    கூட விட மாட்டீங்களா..?!!! )

    DISPAR ( Delhi Institute of Pharmaceutical Sciences & Research )
    நிறைய இந்திய டூத்பேஸ்ட்ல நிக்கோடின்
    இருக்குன்னு கண்டுபிடிச்சி இருக்காங்க..

    ( நிக்கோடின் கேன்சரை உண்டாக்கும் )

    Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு..

    ஒரு சிகரெட்லயே 2mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்..

    அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... அவ்வ்வ்....!!!

    இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம பத்திரிக்கை , டி.வி சேனல்களோட சேவையை எப்படிதான் பாராட்றது..?

    " என்னங்க இது அநியாயமா இருக்கு..?
    நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?"-னு
    தானே கேக்க வர்றீங்க..?

    ம்ம்... என்னங்க பண்றது..?

    காசுக்காக மக்களுக்கு கவர்மென்ட்டே சாராயம் விக்கிற நாடுங்க இது..

    இங்கே போயி நியாயமாவது, தர்மமாவது..!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.