.

Pages

Monday, October 28, 2013

நீரின்றி தவிக்கும் நம்மூரு குளங்கள் [ புகைப்படங்கள் ] !

அதிரையின் ஒவ்வொரு பகுதிகளிலும் காணப்படும் குளங்கள் ஒவ்வொன்றும் பல தலைமுறையைக் கண்டு ஒரு வரலாற்றை எடுத்துச்சொல்லும் அளவுக்கு விசேஷமானவை. இன்றும் ஏதாவது ஒரு குளத்தைக் நாம் காண நேரிட்டால் நமது நெஞ்சம் துடிதுடித்து அக்குளத்தில் நீராடத்தோணும். அதில் குளித்து மகிழ்வோரைக் கண்டு நமது உள்ளம் பூரிப்படையும் ஆனந்தமடையும்.

இக்குளங்களில் உள்ளூர் மக்கள் நீராடி மகிழ்வதற்கு மாத்திரமல்ல, ஆடு மாடுகள், பறவைகள் நீர் அருந்தி செல்வதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் பயன்தரக்கூடியதாகவும், நீர் ஆதாரத்தை நம்மூருக்கு வாரி வழங்கக்கூடியவையாகவும் இருந்து வருகின்றன.

கோடை காலங்களில் நமக்கு தேவையான தண்ணீர் கிடைக்காதபோது, தாகத்தால் தவித்து விடுகிறோம். குடிக்க மட்டுமல்லாமல் குளிக்க, துணி துவைக்க, பாத்திரம் கழுவ, சமையல் செய்ய என அன்றாடம் தேவைப்படும் தண்ணீரின் அளவு சற்று கூடிக்கொண்டேதான் போகும்.

சமீப காலமாக மழை இல்லாமல் கடும் வெப்பம் நிலவி வந்ததன் காரணமாக நம்மூரின் முக்கிய பகுதிகளில் காணப்படுகின்ற குளங்களும் நீரின்றி வறன்று கிடக்கின்றன. எப்புடி இருந்த நீ ! ஏன் இப்புடி ஆயிட்டே ? என கேட்கும் அளவிற்கு குளங்களின் நிலைமை மோசமடைந்துவிட்டது.

ஏதாவது ஒரு தருணத்தில் நாம் நீந்தி மகிழ்ந்த நமதூர் குளங்கள், இன்று நீரின்றி வற்றிப்போய் அழகு இழந்து அநாதரவாய் கிடக்கின்றன.

சேக்கனா நிஜாம்
நன்றி : சமூக விழிப்புணர்வு பக்கங்கள்












6 comments:

  1. Manai....vaagkalaya......manai. Margkalai veatde manipodum aarevale athekam . Appadesar kulam thannerai parkkum

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  3. வறண்டு கிடக்கும் இக்குளங்களைப் பார்க்கும் போது கண்கள் குளமாகிறது. ஒருகாலத்தில் எவ்வளவு தண்ணீர் தட்டுப்பாடு இருந்தாலும் குளத்தில் மட்டும் தண்ணீர் குறைவில்லாமல் இருக்கும். இன்று அனைத்து வீடுகளிலும் இருக்கும் பைப் வசதி அன்று இல்லை. அப்போது அனைவருக்கும் இந்த குளங்கள் தான் உதவியது.

    ReplyDelete
  4. ஒரு காலத்தில் செடியன் குளத்தில் நண்பர்கள் படை சூழ நீந்திக் குளித்து விட்டு அந்த மதுர மரத்தடியில் கொஞ்ச நேரம் நின்று அரட்டை அடித்து விட்டு ஈரத்துணிகளை சுருட்டி வைத்துக் கொண்டு பசியோடு வீட்டுக்கு நடந்து வந்து பத்துமணிக்கு சாப்பிடும் அந்த நாட்களை நினைத்தால் ...... அடடா ...

    இன்று என்னதான் பைப்புக் குளியல் பாத்ரூம் குளியல் குளித்தாலும் அதற்க்கு ஈடாகாது. அன்றைய குளங்கள் குளிப்பதர்க்கேற்ற குளங்களாக சுத்தமாகவும் இருந்தது.

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    வறண்டு போன இந்த குளங்கள் இதுவரைக்கும் யாருடைய கண்களுக்கும் புலப்படவில்லையா?.

    சமூக பொதுநல நோக்கத்தோடு இதை ஒரு பதிவாக பதிந்து சமூக அக்கறையுள்ள ஒரு சில நெஞ்சங்கள் அதை படித்து கவலைப்படுகின்றன.

    ஊழல் நெஞ்சங்களோ அதை எப்படியாவது விலையாக்கி தான் சுருட்டிக்கொள்ள கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றனர்.

    இவை எல்லாவற்றையையும் வான்மேகம் பார்த்து சிரித்துவிட்டு போய்விடுகின்றது.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  6. சமூக பொதுநல நோக்கத்தோடு இதை ஒரு பதிவாக பதிந்து சமூக அக்கறையுள்ள ஒரு சில நெஞ்சங்கள் அதை படித்து கவலைப்படுகின்றன.

    ஊழல் நெஞ்சங்களோ அதை எப்படியாவது விலையாக்கி தான் சுருட்டிக்கொள்ள கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றனர்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.