இக்குளங்களில் உள்ளூர் மக்கள் நீராடி மகிழ்வதற்கு மாத்திரமல்ல, ஆடு மாடுகள், பறவைகள் நீர் அருந்தி செல்வதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் பயன்தரக்கூடியதாகவும், நீர் ஆதாரத்தை நம்மூருக்கு வாரி வழங்கக்கூடியவையாகவும் இருந்து வருகின்றன.
கோடை காலங்களில் நமக்கு தேவையான தண்ணீர் கிடைக்காதபோது, தாகத்தால் தவித்து விடுகிறோம். குடிக்க மட்டுமல்லாமல் குளிக்க, துணி துவைக்க, பாத்திரம் கழுவ, சமையல் செய்ய என அன்றாடம் தேவைப்படும் தண்ணீரின் அளவு சற்று கூடிக்கொண்டேதான் போகும்.
சமீப காலமாக மழை இல்லாமல் கடும் வெப்பம் நிலவி வந்ததன் காரணமாக நம்மூரின் முக்கிய பகுதிகளில் காணப்படுகின்ற குளங்களும் நீரின்றி வறன்று கிடக்கின்றன. எப்புடி இருந்த நீ ! ஏன் இப்புடி ஆயிட்டே ? என கேட்கும் அளவிற்கு குளங்களின் நிலைமை மோசமடைந்துவிட்டது.
ஏதாவது ஒரு தருணத்தில் நாம் நீந்தி மகிழ்ந்த நமதூர் குளங்கள், இன்று நீரின்றி வற்றிப்போய் அழகு இழந்து அநாதரவாய் கிடக்கின்றன.
சேக்கனா நிஜாம்
நன்றி : சமூக விழிப்புணர்வு பக்கங்கள்
Manai....vaagkalaya......manai. Margkalai veatde manipodum aarevale athekam . Appadesar kulam thannerai parkkum
ReplyDeleteதகவலுக்கு நன்றி
ReplyDeleteவறண்டு கிடக்கும் இக்குளங்களைப் பார்க்கும் போது கண்கள் குளமாகிறது. ஒருகாலத்தில் எவ்வளவு தண்ணீர் தட்டுப்பாடு இருந்தாலும் குளத்தில் மட்டும் தண்ணீர் குறைவில்லாமல் இருக்கும். இன்று அனைத்து வீடுகளிலும் இருக்கும் பைப் வசதி அன்று இல்லை. அப்போது அனைவருக்கும் இந்த குளங்கள் தான் உதவியது.
ReplyDeleteஒரு காலத்தில் செடியன் குளத்தில் நண்பர்கள் படை சூழ நீந்திக் குளித்து விட்டு அந்த மதுர மரத்தடியில் கொஞ்ச நேரம் நின்று அரட்டை அடித்து விட்டு ஈரத்துணிகளை சுருட்டி வைத்துக் கொண்டு பசியோடு வீட்டுக்கு நடந்து வந்து பத்துமணிக்கு சாப்பிடும் அந்த நாட்களை நினைத்தால் ...... அடடா ...
ReplyDeleteஇன்று என்னதான் பைப்புக் குளியல் பாத்ரூம் குளியல் குளித்தாலும் அதற்க்கு ஈடாகாது. அன்றைய குளங்கள் குளிப்பதர்க்கேற்ற குளங்களாக சுத்தமாகவும் இருந்தது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வறண்டு போன இந்த குளங்கள் இதுவரைக்கும் யாருடைய கண்களுக்கும் புலப்படவில்லையா?.
சமூக பொதுநல நோக்கத்தோடு இதை ஒரு பதிவாக பதிந்து சமூக அக்கறையுள்ள ஒரு சில நெஞ்சங்கள் அதை படித்து கவலைப்படுகின்றன.
ஊழல் நெஞ்சங்களோ அதை எப்படியாவது விலையாக்கி தான் சுருட்டிக்கொள்ள கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றனர்.
இவை எல்லாவற்றையையும் வான்மேகம் பார்த்து சிரித்துவிட்டு போய்விடுகின்றது.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
சமூக பொதுநல நோக்கத்தோடு இதை ஒரு பதிவாக பதிந்து சமூக அக்கறையுள்ள ஒரு சில நெஞ்சங்கள் அதை படித்து கவலைப்படுகின்றன.
ReplyDeleteஊழல் நெஞ்சங்களோ அதை எப்படியாவது விலையாக்கி தான் சுருட்டிக்கொள்ள கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றனர்.