.

Pages

Thursday, October 3, 2013

அதிரை மார்கெட் பகுதியில் பயங்கர தீ விபத்து ! பல கடைகள் தீயில் எரிந்து நாசம்.!

அதிரை தக்வா பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான மார்கெட் பகுதியில்   இன்று [ 02/10/2013 ] இரவு 10.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் உணவகங்கள், பலசரக்குக் கடைகள், தொப்பிக்கடை, சலூன்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள்  முற்றிலும் எரிந்து சாம்பலாகின. கடைகளில் இருந்த பொருட்கள் பெரும்பாலும் தீயில் எரிந்து சாம்பலாகின.

தகவல் அறிந்த அதிரை இளைஞர்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து தீயை அணைக்க உதவினர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிரை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைப்பதற்கு வேண்டிய உதவியை செய்தனர்.

அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, பேராவூரணி ஆகிய ஊர்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்தின் காரணமாக அதிரை நகரில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தன.

மேலும் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர், தாசில்தார்,  டிஎஸ்பி, வருவாய்துறை அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தீ விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கூடுதல் செய்திகள் நாளை...














11 comments:

  1. .......اللَّهُ أَكْبَرُ

    ReplyDelete
  2. தாமதமாக வந்த தீயணைப்பு வீரருக்கு மண்டை உடைப்பு
    ----அஸ்ஸலாமு அலைக்கும். இனிமேல்தான் பத்தி எறிய போகிறது. அல்லாஹ்தான் காப்பாத்தனும். இந்த பிரட்சனை கொழுந்துவிட்டு எறியாமல் எல்லாரும் கூடி சமாதன தண்ணி ஊத்தி அணைத்தால் நலம்.

    ReplyDelete
  3. Assalamualaikkum allavatrukkum allah pothumanavan.nadakkakudatha sampavam nadanththullathu porumaiyalarkaludan allah erukkenran

    ReplyDelete
  4. இது போன்று 2 3 தடவை தீ ஏற்ப்பட்டு. உள்ளது இது எதனால் ஏற்ப்பட்டது.யாருடைய நாசவேளையுமா இல்ல எதிர் பாரத விபத்தா?

    ReplyDelete
  5. இது போன்று 2 3 தடவை தீ ஏற்ப்பட்டு. உள்ளது இது எதனால் ஏற்ப்பட்டது.யாருடைய நாசவேளையுமா இல்ல எதிர் பாரத விபத்தா?

    ReplyDelete
  6. இது போன்று 2 3 தடவை தீ ஏற்ப்பட்டு. உள்ளது இது எதனால் ஏற்ப்பட்டது.யாருடைய நாசவேளையுமா இல்ல எதிர் பாரத விபத்தா?

    ReplyDelete
  7. இந்த இடத்துல இரவு நேரங்கள குடிகாரர்களின் இடமாக மாறி போயிருது...இதயும் கவனத்துல வைங்க.

    ReplyDelete
  8. Assalamu Alaiku. Allahu Akbar.
    yen thee anaippu veerarai adikanum? avarkalum manithan than thamathamaha vanthathu avarkalin thavaru illai. Akkarai irunthal namma ooril oru thee anaippu vahanam irupatharku muyarchi seyyavum.

    ReplyDelete
  9. மார்கெட் பகுதியில் இது போன்று 2 3 தடவை தீ ஏற்ப்பட்டு உள்ளது இது எதனால் ஏற்ப்பட்டது.யாருடைய நாசவேளையுமா இல்ல எதிர் பாரத விபத்தா என்று தெரிய வில்லை, இனிமேல் இது போல் பத்தி எறியமல் அல்லாஹ்தான் காப்பாத்தனும்,

    ReplyDelete
  10. நம்ம ஊர்லதொடரும் தீவிபத்தினால் அதிரை மக்கள் அச்சத்தின் பிடியில் இருக்கின்றனர் .இப்பகுதியில் உடனே தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்,

    ReplyDelete
  11. தீவிபத்தினால் அதிரை மக்கள் அச்சத்தின் பிடியில் இருக்கின்றனர் .இப்பகுதியில் உடனே தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்,

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.