.

Pages

Saturday, October 5, 2013

லண்டன் மஸ்ஜித்தில் தமிழில் ஜூம்மா பேருரை ! பெரும்பாலான அதிரையர் பங்கேற்பு !

தாய் மொழி உரை மூலம் பயான் செய்து கருத்து முழுமையாக சென்றடையும் நோக்குடன் நம் தமிழ் சமுதாயம் சார்பாக தென் லன்டன் பகுதியில் மஸ்ஜித் உருவாக்கும் நன்னோக்குடன் ஆரம்பத்தில் ஜூம்மா தொழுகை மட்டும் நடத்தி நாளடைவில் சொந்த கட்டிடத்தில் ஐவேளை தொழுகைக்கான பள்ளி கட்டும் முடிவின் படி தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில்  லன்டன் - குரைடன் பகுதியில் நேற்று ( 04-10-2013 வெள்ளி ) முதன் முதலாக தமிழ் பேருடையுடன் ஜூம்மா தொழுகை அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்தது. 

இதற்கு தமிழ் நாட்டை சேர்ந்த பலரின் முயற்ச்சியுடன் நம் அதிரையர் சார்பாக பெ.த தமீம், மற்றும் கா.மு. ரபீக் இவர்களின் தீவிர முயற்ச்சியும் குறிப்பிடத்தக்கது. கூடிய விரைவில் அல்லாஹ்வின் பள்ளி உருவாகவும் கியாமத் நாள் வரை தொடர்ந்து  தொழுகையால் பள்ளி நிரம்பவும் துஆ செய்வோமாக ! 

இந்த மஸ்ஜித்தில் பெரும்பாலான அதிரையர் ஜும்மா தொழுகையில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நமதூர் ரஹ்மானியா மதரஸாவில் மார்க்க கல்வியை கற்ற சகோதரர் இமாமாக இருந்து தொழுகையை நடத்தியது குறிப்பிடதக்கது.

தகவல்: மு.செ.மு. ஜஹபர் சாதிக் மற்றும் இம்தியாஸ் 






11 comments:

  1. Allah ugkalukkum ugkal kudumpaththar kal anaivarukkum parakkathseaivanaka, meka peareya palle katda allah uthave seaivanaha namma or emtheyas thaiyup eriuvarukkum matrum entha pallekkaha muyarchche panneya anaiththu ullagkalukkum nanre. Ajmeer agencies savanna

    ReplyDelete
  2. ஏற்பாடு செய்த அனைவருக்கும் இதனை செய்தியாய் வெளியிட்ட அனைவருக்கும் அல்லாஹ்வின் அருள் உண்டாவதாக

    ReplyDelete
  3. அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் லண்டனில் தாய் மொழி பயான் உரை கேட்பதற்கே இனிமை இதற்க்கு முழு முயற்சி செய்த அனைவர்க்கும் எனத துவாவும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  4. அனைவருக்கும் அல்லாஹ்வின் அருள் உண்டாவதாக

    ReplyDelete
  5. Engal alaipai eatru prayer ku nwandhamaiku adirai makkal mikka nadriyai therivithu kolkiren.. idhi mukkaavaasi adirai makkale. En friend imtias kaka and jafer kaka thoyoub kaka tamim kaka, ajar, raajik, hassan, arsath, imran, wandhu arrange panni kuduthathuku,, allaah arul purivaanaha ammeen

    ReplyDelete
  6. இறையில்லம் கட்டுவதற்கான நிய்யத்தை சீக்கிரம் அல்லாஹ் நிறைவேற்றி தருவானாக ஆமீன்

    ReplyDelete
  7. M.h.ஜஹபர் சாதிக் சீக்கிரம் நிய்யத்ததைவைக்கவும் இண்ஷாஅல்லா

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.