இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் ஒப்புதல் இல்லாமல் செயல்பட்ட தஞ்சாவூர் நகரம், மனோஜியப்பா வீதியில் செயல்பட்ட வந்த பிரின்ஸ் மழலையர் தொடக்கப்பள்ளி, கரந்தை, வானியர் தெருவில் செயல்பட்டு பாரத் மழலையர் தொடக்கப்பள்ளி, ஒரத்தநாடு பொட்டலங்குடிகாட்டில் செயல்பட்டு வந்த சுதன் மழலையர் தொடக்கப்பள்ளி, ஒரத்தநாடு, ராயர் தெருவில் செயல்பட்டு வந்த பென்குவின் மழலையர் தொடக்கப்பள்ளி, ஒரத்தநாடு ஒன்றியம், கண்ணுக்குடி மேற்கு கிராமத்தில் செயல்பட்டு வந்த விக்டரி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் மூட உத்தரவிட்டார்.
தஞ்சாவூர் ஒன்றியம், வயலூரில் செயல்பட்டு வந்த அமெரிக்கன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, திருவிடைமருதூர் ஐ.பி.ஆர். மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, சேதுபாவாசத்திரம் ஒன்றியம், அதிராம்பட்டிணம் அர்க்கம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகள் உரிய அடிப்படை வசதிகள் இல்லாமலும் ஒப்புதல் பெறாமலும் செயல்பட்டு வந்தது தெரிய வந்ததையடுத்து உடனடியாக மூட உத்தரவிடப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அனுமதி பெறாத பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.
அனுமதி பெறாமல் நடத்தும் பள்ளிகள் மூடுவதோடு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. ஆக்கப்பூர்வமான மாற்றங்கள், கல்வித்துறையில் அவசியம். மறைமுகமாக, பல்வேறு அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன என்று செய்திகள் வருகின்றன. ஆனால் சாராய கடைகளை அரசே எடுத்து முன் வந்து வெற்றிகரமாக செய்ய வேண்டும். ஏனெனில், தமிழனின் எதிர்காலம் டாஸ்மாக்கில் தான் உள்ளது. டாஸ்மாக், அம்மா உணவகம், உப்பு, தண்ணீர் விற்பனை என்று தனியார் செய்ய வேண்டிய தொழில்களை ஜெயா அரசே செய்கிறது. ஆனால் அரசு செய்ய வேண்டிய ஸ்கூல் மற்றும் பொது மருத்துவமனைகளை தனியாரிடம் விட்டு விட்டது. அரசை மிக லாபகரமாக ஜெயா அரசு நடத்தி செல்கிறது. பிரமாதம் பிரமாதம். பேஷ் பேஷ்.ரொம்ப நன்னா ஆட்சி பண்றா.
ReplyDelete