புகை உயிருக்கு பகை என்று என்ன தான் கரடியாக கத்தினாலும், புகைப்பவர்கள் அந்த பழக்கத்தை விடுவதாக இல்லை. இந்நிலையில் அவர்களை வழிக்கு கொண்டு வரும் அதிரடி முடிவை சீனா கையிலெடுத்துள்ளது. அதன்படி புகை பிடிப்பதற்கு எதிராக கடுமையான சட்டம் இன்று முதல் அந்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அந்நாட்டில் இனி பொது இடங்களான அலுவலகம், உணவகம், ஓட்டல்கள் மற்றும் மருத்துவமனைகளில் புகை பிடிப்பது சட்டப்படி குற்றமாகும். மேற்கண்ட இடங்களில் இனி யாராவது புகை பிடித்தால் அவர்களுக்கு 10000 யுவான்கள் ( இந்திய ரூபாயின் மதிப்பில் 1 லட்ச ரூபாய் ) அபராதம் விதிக்கப்படும். அதே போல் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் புகைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் அரசின் இச்சட்டத்தை பின்பற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக அலுவலகங்கள் மற்றும் ஓட்டல்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தடையை நடைமுறைப்படுத்தாவிட்டால் அவர்களுக்கு வழங்கப்பட்ட லைசென்சு ரத்து செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் சீன அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
சீனாவின் இம்முடிவை இந்திய அரசும் பின்பற்றுமா என்பதே நம் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.
நன்றி: மாலை மலர்
அந்நாட்டில் இனி பொது இடங்களான அலுவலகம், உணவகம், ஓட்டல்கள் மற்றும் மருத்துவமனைகளில் புகை பிடிப்பது சட்டப்படி குற்றமாகும். மேற்கண்ட இடங்களில் இனி யாராவது புகை பிடித்தால் அவர்களுக்கு 10000 யுவான்கள் ( இந்திய ரூபாயின் மதிப்பில் 1 லட்ச ரூபாய் ) அபராதம் விதிக்கப்படும். அதே போல் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் புகைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் அரசின் இச்சட்டத்தை பின்பற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக அலுவலகங்கள் மற்றும் ஓட்டல்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தடையை நடைமுறைப்படுத்தாவிட்டால் அவர்களுக்கு வழங்கப்பட்ட லைசென்சு ரத்து செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் சீன அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
சீனாவின் இம்முடிவை இந்திய அரசும் பின்பற்றுமா என்பதே நம் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.
நன்றி: மாலை மலர்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.